35. இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையா? அரசின் கடமையா? உங்களுக்கு என்ன பயன்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
நமது இந்திய அரசமைப்பில், அடிப்படை உரிமைகளாக அசைக்க முடியாத கட்டமைப்பு செய்த விசயங்களில் ஒன்றுதான், இட ஒதுக்கீடு பிரச்சினை. இப்பிரச்சினை இதற்கு மேலும் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து, முடிவெடுக்க வேண்டியது உங்களின் கடமையே.
இந்திய சாசனமாம் இந்திய அரசமைப்புக் கோட்பாடு 15 ன் கீழான அறிவுறுத்தலில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த விசயத்திலும், சம உரிமையைப் பறிக்கக் கூடாது என வலியுறுத்தும் அதே சமயம், அதன் உட்கோட்பாடான 15/3ல், “சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கிய வகுப்பினரராக உள்ள, தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக, சிறப்பான ஏற்பாடுகளை அரசு செய்வதை, சம உரிமையைப் பாதிப்பதாகக் கருதக்கூடாது” என அறிவுறுத்துகிறது.
அடுத்ததாக, கோட்பாடு 16ன் கீழான அறிவுறுத்தலில், அரசின் கீழான வேலை வாய்ப்பில் எந்த காரணத்துக்காகவும், யாருக்கும் சம வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என வலியுறுத்தும் அதேசமயம், அதன் உட்கோட்பாடான 16/4ல், ”அரசுப் பணிகளில், பின் தங்கிய வகுப்பினருக்கு, போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி. அத்தகையோருக்கு சில பணியிடங்களை, அரசு ஒதுக்கீடு செய்வதை சம உரிமையை பாதிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என அறிவுறுத்துகிறது.
இதில் இருந்து நாம் உரத்த சிந்தனைக்கு உரிய பல விசயங்களைத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
அ) இட ஒதுக்கீடு என்பது எவர் ஒருவரின் அடிப்படை உரிமையும் கிடையாது. மாறாக, குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, அரசே முன் வந்து கொடுக்கும் ஒரு நல்வாய்ப்பு சலுகைதான் என்பதால், அதை எனக்கு கொடுக்க வேண்டும் என யாரும் உரிமையோடு உரிமை கோர முடியாது.
ஆ) சமுதாயத்திலும், ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.