II வெளியீட்டாளர் உரை
2010-க்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி என்ற வகையில் வாரண்ட பாலா அவர்கள் சட்ட விழிப்புணர்வுக்கு என திட்டமிட்டுள்ள ஐந்து நூல்களில் இச்சட்ட அறிவுக்களஞ்சியம் மூன்றாவது படைப்பாகும்.
இக்களஞ்சியத்தில் வழக்குக்கு மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பல்வேறு சட்ட விசயங்களை மிக எளிமையாகவும், நகைச்சுவை உணர்வோடும், சிந்திக்கும் படியும் எழுதியுள்ளார். அல்ல அல்ல. எப்போதும் போலவே நம்முடன் பேசியுள்ளார்.
பேசுவதற்கு என்று பல்வேறு தொழில் நுட்ப சாதனங்கள் எல்லாம் உலகெங்கும் உள்ள பட்டித்தொட்டிகள் எல்லாம் பரவி, பேசியவைகள் அனைத்தும் காற்றோடு கரைந்து கொண்டு இருக்க, தமது கருத்துக்கள் கரையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எழுத்து மூலமாக பேசுவதை முதல் முதலாக கண்டு பிடித்து அதில் எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றுள்ளார்.
ஐம்புலன்களில் பார்ப்பதால் உணர்தல் 65%, கேட்பதால் உணர்தல் 20%, மற்ற புலன்களால் உணர்தல் தலா 5% என்று, ஒருவர் உணரும் அறிவியல் தன்மையில், உண்மையில், அவரின் கடமையாக 85% கட்டாயமாக உணரும் நிலைக்கு நம்மை எல்லாம் தள்ள வேண்டும் என்பதற்காகவே, இக்களங்சியத்தில் தனக்கே உரிய பாணியில் முயன்று பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார்.
பொதுவாக எழுத்தாளர்கள் எத்தனை நூல் எழுதினாலும், அது ஒவ்வொன்றிலும் அவர்களைப் பற்றிய குறிப்பையே தந்து அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இவர், தமது கருத்துக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கும் ஆதாரங்களை வெளியிடுவதையே கொள்கையாக கொண்டு, “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தைச் சொல் மிக்க மந்திர மில்லை” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, நமது நாட்டின் தந்தையான மகாத்மா ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.