25. உரிமைகளின் விளக்கங்கள்.
அ. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துக்கூறும் உரிமை, மற்றும் கருத்து கோரும் உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான் நாமெல்லாம் பேசுகிறோம். எழுதுகிறோம், கருத்தைக் கூறுகிறோம். இதிலேயே தகவல்கோரும் உரிமையும் அடங்கி இருக்கிறது என்றாலும், மேற்படி உரிமையில் அது சேர்க்கப்படவில்லை என்பதால்தான் அதை பிரித்துக்காட்டும் விதமாக அடிக்கோடு இட்டுள்ளேன்,
சட்டத்தில் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்? என நினைக்கலாம். இது போன்ற நிலையை உங்களுக்கு இப்படித்தான் விளக்க முடியும்.
ஆம்! இக்களஞ்சியத்தில் எனது எழுத்து உரிமை மூலம் நான் சொல்ல நினைப்பதை எழுத்தால் எழுதி உள்ளதோடு, பேச நினைத்ததை பேசி, எனது சட்டக்கருத்துக்களை பதிவு செய்து உள்ளேன் அல்லவா? இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்ன செய்வீர்கள்? என்னிடம் கேட்பீர்கள் அல்லவா! அப்படி கேட்பதற்கு சட்டப்படியான பெயர்தான் தகவல் கோருதல். இப்படி கோரும் தகவல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நான் மேற்சொன்னது போல யாராலும் மறுக்க இயலாத நியாயமான ஆணித்தரமான கருத்தாக. அதுவும் எழுத்துப் பூர்வமாகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால், இந்த சிறு விசயங்கள் கூட புரியாமல்தான நமது இந்திய அரசு 2005 ஆண்டில், தகவல் பெறும் உரிமை சட்டம் என்றதொரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதில் இன்னொரு முக்கிய செய்தியையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்திய சாட்சிய ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.