III மதிப்பு மிக்க கருத்துரைகளும், மதிப்புரைகளும்
III-1திரு.ந.ரங்கசாமி புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர்
16-11-2008 அன்று இந்நூலை வெளியிட்டு ஆற்றிய கருத்துரை
நீதியைத்தேடி. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என நூலுக்கு தலைப்புக் கொடுத்து உள்ளார்கள். அன்பு, இரக்கம், பாசம், பரிவு இருந்தால் நீதியைத்தேடி. நாம் நிச்சயம் எங்கும் போக வேண்டி இருக்காது. நீதி நிச்சயம் நம்மிடமே இருக்கும்.
மனிதனுக்கு ஆசை அதிகம். அந்த ஆசை மேலும் அதிகமாகும் போது தவறு செய்ய நேரிடுகிறது. அத்தவறால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் நீதி. இந்த நீதியை கொடுப்பதற்காகவும், சட்டத்தின் மூலம் மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்? என்பதற்காகத்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
இந்த சட்டங்களை எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்வது என்பது இயலாது என்றாலும் கூட, “அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். இதை கடமையாக கொள்ள வேண்டும்”. சட்டத்தின் அடிப்படையைத் தெரிந்து: கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இந்த நூலின் மூலமாக அமையும் என்பது என எண்ணம். இந்த நல்ல எண்ணத்தின்பால் இந்நூல் எழுதப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
நீதியைத்தேடி நாம் அலைவதை விட எல்லோரும் சட்டத்தைத் தெரிந்து கொண்டு நியாயமாக வாழ வேண்டும். அதன் மூலம் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நியாயமாக வாழ்ந்தால் பிரச்சினை இருக்காது. நீதியைத்தேட வேண்டிய அவசியமிருக்காது. நியாயமாக வாழ அன்பு, இரக்கம், பாசம், பரிவு மிகவும் அவசியம்.
எல்லோரும் பிரச்சினை இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். இந்த நல்ல எண்ணத்தோடு இந்நூலை எழுதி வெளியிட்டு இருக்கின்ற, ஆசிரியர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
III-2 திரு. பிரசன்ன வேங்கடாச்சாரியார் சதுர்வேதி
ஸ்ரீ.ராமானுஜா மிஷன் டிரஸ்ட், சென்னை
16-11-2008 அன்று நூலை பெற்றுக்கொண்டு ஆற்றிய கருத்துரை.
மாக்கள் என்பதில் இருந்து வேறுபட்டு, பண்பாலே தன்னைக்காத்து, தன்னை இழந்து, தன்னை அண்டியிருக்கின்ற அனைவரையும் காத்து, அவர்களையெல்லாம் கரையேற்றுகின்ற உயர்ந்த ஒழுகலாருடையது, மனிதருடையது. ஆனால், ஒவ்வொரு பொருளிலும் உள்ள வளர்ச்சியிலே நன்மை ஏற்படுவது போல, நலிவும் ஏற்படுகிறது.
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்கிற இந்த நான்கும் இழுக்காறு என வந்து மனித குலத்தை நலிவடையச் செய்யும். இப்படி நலிவடைந்திருக்கின்ற மனித குலத்தை வாழ்விக்கவும், தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொள்ளவும், ஏனைய குறைபாடுகளை நெறிப்படுத்தவும் உள்ளுணர்வு என்ற முதல் சட்டத்தையும், இறை உணர்வு என்ற இரண்டாவது சட்டத்தையும், அரசினால் இயற்றப்படும் மூன்றாவது சட்டத்தையும் வைத்திருக்கிறார்கள்.
இம்மூன்றையும் ஒருங்கே வைத்திருப்பவர்கள் தாங்களாலேயே திருத்தப்படுவார்கள். நெறிப்பட்டோருக்கு உள்ளுணர்வுதான் சட்டம்.. நெறிப்படாதவர்களுக்கு அரசின் சட்டம்.. இது போக அரசின் சட்டத்தில் இருந்து அகன்று செல்லக் கூடியவர்களுக்கு, ஆண்டவனின் சட்டம் என்று நான்காவது சட்டத்தையும் பெரியோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
இந்த மூன்று சட்டங்களும், மனிதனுக்கே உரித்தான உடல், உயிர், உடைமை, உறவு, உரிமை என்ற ஐந்தையும் காக்கின்றன. இவைகளைக் காக்கும் உணர்வு உள்ளவர்களைத்தான் விழிப்புணர்வு உள்ளவர்கள் என சொல்வார்கள். இந்த விழிப்புணர்வு என்பது ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.