GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறிப்புகளின் விபரங்கள்.

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறிப்புகளின் விபரங்கள்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.
இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.

ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :

  1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  2. ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  3. மூ.மு எண் என்றால் மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  4. நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  5. ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.
  6. தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

7.ப.வெ எண் என்றால் பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

  1. நே.மு.க எண் என்றால், நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண் (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.

நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து அளிக்க வேண்டும்.

மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்…?
மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால், அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நில உச்சவரம்பு. இந்தியாவில் மாநில வாரியாக ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம்நில உச்சவரம்பு. இந்தியாவில் மாநில வாரியாக ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 83 இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா

தகவல் பெரும் உரிமை சட்டம் 2005-ன் படி கேட்கப்பட்ட கேள்விகள்.தகவல் பெரும் உரிமை சட்டம் 2005-ன் படி கேட்கப்பட்ட கேள்விகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 16 தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1), 6(3) மற்றும் 7(1)ன் கீழ் தகவல் கோரிமனு. அனுப்புதல்: பெறுதல்: பொது

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)