”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 26
27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.
மாவட்ட அளவில் குற்றவியல்நடுவர்கள் மற்றும் மன்றங்கள்
அ) மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம்
மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் என்பது தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றங்களை குறிக்கும் இந்த நீதிமன்றங்களின் பெயர் பல இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த நீதிமன்றத்தில் தமக்கு அதிகார வரம்புள்ள குற்றவியல் வழக்கையும், உரிமையியல் வழக்கையும் ஒரே நீதிபதி காலை மாலை என தனித்தனியாக நேரம் ஒதுக்கி விசாரிப்பார்.
இவர் இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நடுவர் என்று அழைக்கப்படுவார். இவருக்கு தமக்கு அதிகார வரம்புள்ள இடத்தில் நடக்கும் குற்றம் பற்றி விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு.
இவர் அதிகபட்சமாக குற்றவியலைப் பொறுத்த வரை ஒரு ஆண்டு சிறை தண்டணையும், ரூபாய் ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(3)-இன் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.11(3)-இன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகும்.
ஆ) நீதித்துறை நடுவர் மன்றம்
நீதித்துறை நடுவர் மன்றம் என்பதும் தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றத்தையே குறிக்கும்.
ஆனால் இந்த நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு விசாரணை மட்டுமே நடை பெரும். இவர் நடுவர் என்றே அழைக்கப்படுவார். அதுவும் இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நடுவர் என்றே அழைக்கப்படுவார். இவருக்குத் தமக்கு அதிகார வரம்புள்ள இடத்தில் நடக்கும் குற்றம் பற்றி விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு.
இவர் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(3)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.11(1)-இன் கீழ் அமைக்கப் படுவதாகும்.
இ) சிறப்பு நீதித்துறைக் குற்றவியல் நடுவர் மன்றம்
இம்மன்றமானது ஒரு குறிப்பிட்ட வழக்குகளுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்குகளின் பிரிவுகளுக்கு அல்லது பொதுவான வழக்குகளுக்கு என்று மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டிய மன்றமாகும். இதில் குற்ற வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்படும். இவர் சிறப்பு நடுவர் என அழைக்கப்படுவார். இவருக்குத் தமக்கு அதிகார வரம்புள்ள இடத்தில் நடக்கும் குற்றம் பற்றி விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு.
இவருக்கு அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்கும் அதிகாரம் உண்டு. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.13-இன் கீழ் அமைக்கப்படுவதாகும் என்றாலும் இம்மன்றங்கள் பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டதாகக் தெரியவில்லை.
இம்மன்ற நடுவர்களின் பதவி காலம் ஒராண்டுக்கு மேற்படாமல்தான் இருக்கும். தேவை எனில் சிறப்பான ஆணையின் மூலம் வேறு நபரோ அல்லது மீண்டும் அதே நபரோ நடுவராக நியமிக்கப்படுவர். இம்மன்ற நடுவர், சட்ட அறிவு பெற்ற அரசு ஊழியராக அல்லது ஒய்வு பெற்ற அரசு ஊழியராகக் தான் இருக்க வேண்டும்.
.முதன்மைக் குற்றவியல் நடுவர்மன்றம்
முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என்பது மாவட்டத் தலை நகரங்களில் செயல்படும் தலைமைக் குற்றவியல் நீதிமன்றமாகும். இதன் அதிகார வரம்பு அந்த மாவட்டம் முழுவதும் இருக்கும்.
மேலும் அம்மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நடுவர் மன்றங்களை மேலாண்மை செய்வதும் இவரது பணி ஆகும். இவர் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், சட்டபடி விதிக்கத் தக்க அபராதத்தையையும் அல்லது இரண்டையும் விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(1)-இன் கீழ் உண்டு.
இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.12(1)-இ ன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகும்.
மாநகர அளவில் குற்றவியல் நடுவர்கள் மன்றம் / மன்றங்கள்
அ) மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றம்
மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றம் என்பது சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் மட்டுமே செயல்படும் குற்றவியல் நீதிமன்றங்களைக் குறிக்கும். இவர்கள் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர்கள் என்று அழைக்கப் படுவார்கள்.
மாநகரக் குற்றவியல் நடுவர்கள் ஒவ்வொருவரும் அந்த மாநகர் முழுவதும் தமது அதிகார வரம்பை உடையவர்கள் எனகு.வி.மு.வி 16(3) தெளிவாக கூறினாலும், இவர்கள் அதை செயல்படுத்துவதில்லை. அதாவது சென்னையை பொறுத்த மட்டில் எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை என மூன்று இடங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன.
சென்னை மாநகரத்தில் எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும் கு.வி.மு.வி 16(3)-ன் படி மேற்படி மூன்று நீதிமன்றத்தில், எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் முறையீடு தாக்கல் செய்தால், விசாரணை செய்ய வேண்டும் என்றாலும், காவல்துறை போலவே,
“இது எனது அதிகார வரம்புக்கு உட்பட்டதில்லை என நடுவர்கள் மனுவைத் திருப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஐந்து ஆயிரம் அபராதம் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.