GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் RELEASE DEED | யார் யார் விடுதலைப் பத்திரம் எப்போது எழுதித் தரலாம்?

RELEASE DEED | யார் யார் விடுதலைப் பத்திரம் எப்போது எழுதித் தரலாம்?

குறிப்புகள்:

  • விடுதலை பத்திரம் என்பது என்ன?
  • விடுதலை பத்திரன் யார் யார் எழுதவேண்டும்?
  • விடுதலை பத்திரம் பதிவு செய்யப்படவேண்டுமா?
  • விடுதலை பத்திரம் பதிவு செய்ய எவ்வளவு செலவு ஆகும்?
  • ஒரு முறை எழுதப்பட விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
  • அசையும் அல்லது அசையா சொத்தின் பேரில் தனக்கு இருக்கும் உரிமையை, இதர உரிமையாளர்களுக்கு விட்டுகொடுப்பதே விடுதலையாகும். அதற்காக செய்யப்படும் ஆவணமே, விடுதலை பத்திரமாகும்.
  • ஒரு சொத்தை குத்தகைக்கு எடுத்த நபரும், குத்தகையை விட்டு விலக விடுதலை பத்திரம் எழுதிகொடுத்துவிட்டு, விலகிக்கொள்ளலாம்.
  • விடுதலை பத்திரம் எழுத ரூ100க்கான முத்திரைத்தாள் பயன்படுத்த வேண்டும்.
  • குடும்ப சொத்துக்கு பாத்தியப்பட்டவர்கள், விடுதலை அளிக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட சொத்தின் மதிப்பில் 1 சதவீதம் முத்திரைத்தாள் பயன்படுத்தி பதிவு செய்யவேண்டும். மேலும், பதிவுக்கான இதர செலவுகளையும் செய்ய நேரிடும்.
  • சொத்துக்கு உரிமை இல்லாத ஒரு மூன்றாம் நபருக்கு விடுதலை அளிபதாக இருந்தால், அதற்கு 7 சதவீதம் முத்திரைத்தாள் அயன்படுத்த வேண்டும்,
  • ஒருமுறை விடுதைபத்திரம் எழுதி பதிவு செய்யப்பட்டுவிட்டால், எக்காரணம் கொண்டும் அதை திரும்பப்பெறவோ, ரத்தி செய்யவோ முடியாது.
  • எந்த காரணத்திற்காக விடுதலை கொடுக்கபடுகிறது, அல்லது விடுதலை வாங்கப்படுகிறது என்பதை தெளிவாக எழுதி, இருவரும் நன்கு படித்து பார்த்து கையெழுத்திட்டு, பதிவுத்துறையில் பதிவு செய்திட வேண்டும்.
  • வெளிநாட்டில் வசிப்பவர், விடுதலை பத்திரம் எழுதிகொடுக்க விரும்பினால், ஒரு பத்திரத்தில் அவர் விரும்பிய ஒரு நபருக்கு பவர் என்ற அதிகாரம் அளிக்கவேண்டும். ஒரு பத்திரத்தில் அதிகார வரம்பு விஷயங்களை எழுதி, வசிக்கும் நாட்டில் நோட்டரி அட்டஸ்ட் செய்து, அங்கு இருக்கும் எம்பசி சென்று அங்கேயும் அட்டஸ்ட் செய்தபின்பு, அந்த பத்திரத்தை அதிகாரம் அளிக்கப்ப்டவரிடம் ஒப்படைக்கவேண்டும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, கொடுக்கப்படும் விடுதலை சட்டப்படி செல்லுத்தக்கதாகும்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காதுஎந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

Views: 12 எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது? ஏன் சில நிலம் வைத்துள்ளவர்கள் இன்று வரை அலைகிறார்கள்? சிலர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாலும், தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் விண்ணப்பித்திருந்தாலும், சில நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாத நிலை

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால், அகற்றும் வழிமுறைகள் என்ன?அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால், அகற்றும் வழிமுறைகள் என்ன?

Views: 59 🙏அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால், அகற்றும் வழிமுறைகள் என்ன? 👉முதலில் தாசில்தாருக்கு புகார்மனுஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு… அந்தப் பகுதியின் தாசிதார் அவர்களுக்கு பதிவுத் தபாலில்

திருவண்ணாமலையில் எனக்கு நடந்த சம்பவம், ஆவணங்களை திரட்டி வழக்கு பதிவு செய்தது எப்படி?திருவண்ணாமலையில் எனக்கு நடந்த சம்பவம், ஆவணங்களை திரட்டி வழக்கு பதிவு செய்தது எப்படி?

Views: 12 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.