GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

ரமேஷ் என்பவரும், அம்பிகேஸ்வரி என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். அவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு ஒன்று நடந்து வந்தது.

அந்த வழக்கில் ரமேஷ், தான் உடல் ஊனமுற்றவர் என்றும், தன் மனைவி வேலைக்கு சென்று மாதம் ரூ. 30,000/- சம்பாதிப்பதாகவும், அவருக்கு தனிப்பட்ட முறையில் சொத்துகள் இருப்பதால் தனக்கு மாதம்தோறும் ரூ. 5000/- ஜீவனாம்சமாகவும், ரூ. 20000/- த்தை வழக்கு செலவுத் தொகையாகவும் தர உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவிற்கு எதிருரை தாக்கல் செய்த மனைவி, திருமணத்திற்கு பிறகு கணவர் பெங்களூருக்கு வேலைக்கு சென்றதாகவும், பின்னர் வேலைக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறி வியாபாரம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், தனது பெற்றோரிடமிருந்து ரூ. 100000/- வாங்கி கொண்டு வரும்படி சொன்னதாகவும், தினமும் குடித்து விட்டு வந்து பணம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், தன்னுடைய நகைகள் மற்றும் பணத்தை பிடுங்கி கொண்டதாகவும், தனது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கணவர் பணம் தரவில்லை என்றும் கூறி அதன் காரணமாகவே அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் கணவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், வேண்டுமென்றே வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருந்து கொண்டு தன்னிடம் ஜீவனாம்சம் கேட்பது நல்ல ஆணுக்கான அழகல்ல என்றும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் வீட்டில் சும்மா படுத்துக் கொண்டு மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்பதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதனை எதிர்த்து கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.வழக்கை நீதிபதி விசாரித்தார்.

இடைக்கால ஜீவனாம்சம் கோரி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை இருதரப்பினராலும் தாக்கல் செய்யப்படும் சத்திய பிரமாண வாக்குமூலங்களை கொண்டு முடிவு செய்ய வேண்டும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் உத்திரவிடுவதென்பது இந்து திருமணச் சட்டம் பிரிவு 25 அல்லது இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவிச் சட்டம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் உத்தரவிடுவது போன்றதாகும். கணவர் ஒருவர் சுயமாக சம்பாதிக்க எவ்வித தடையும் இல்லாத நிலையில் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய முடியாது.

வழக்கு செலவுகள் என்பதற்கு பிரிவு 24 ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கட்டணம், முத்திரைத்தாள் அல்லது நீதிமன்ற கட்டணம், குமாஸ்தா செலவு, எழுதுபொருள் செலவுகள் மற்றும் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு ஆகும் செலவு ஆகியவை அடங்கும் என்று அந்த பிரிவில் கூறப்பட்டுள்ளது.

இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் “கோவிந்தசிங் Vs வித்யா (AIR-1999-Rajasthan – 304) ” என்ற வழக்கில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் இரு தரப்பினரும் மனுதாக்கல் செய்யலாம். ஒரு தரப்பினர் வருமானம் இல்லாத நிலையில் மற்றொரு தரப்பினர் ஜீவனாம்சம் கேட்கலாம். ஆனால் சம்பாதிக்கக்கூடிய திறன் இருந்தும் வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருந்து கொண்டு மறு தரப்பினரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது. இது ஆண், பெண் என இருவருக்குமே பொருந்தும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இதே தீர்ப்பை அடியொற்றி கல்கத்தா உயர்நீதிமன்றம் “ரெசேனா மித்ரா Vs B. ஸ்ரீமதி சந்தானா மித்ரா” AIR-2004-Calcutta-61)” என்ற வழக்கிலும்

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்” யஸ்பால் சிங் தாக்கூர் Vs அஞ்சனா (AIR-2001-M.P-67)” என்ற வழக்கிலும் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்கும் போது கணவன் அல்லது மனைவியின் பொருளாதார சூழ்நிலைகளை மட்டுமே நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். தரப்பினர்களின் நடத்தை குறித்து பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வழக்கில் ரமேஷ் தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு சுயமாக வியாபாரம் செய்யப் போவதாக கூறி வீட்டில் சும்மா படுத்து கொண்டு சோம்பேறியாக இருந்துள்ளார். நல்ல உடல் நலத்துடனும், கல்வித் தகுதியோடும் ஏற்கனவே வேலையில் இருந்த ஒரு நபர், அந்த வேலையை விட்டுவிட்டு வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை துணையிடம் இடைக்கால ஜீவனாம்சம் என்ற பெயரில் பணம் பறிக்கக்கூடாது. பிரிவு 24 இந்த மாதிரியான நபர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டதல்ல. வெறுமனே சோம்பேறியாக இருக்கும் நபருக்கு சட்டம் ஒருபோதும் உதவாது.

ரமேஷ் ஒரு சோம்பேறி என்று கூறி அவர் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

CRP. No – 1909/2010 Dt – 22.3.2013

ரமேஷ் Vs அம்பிகேஸ்வரி

2013-2-LW-CIVIL-901.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 எங்களிடம் வருடம் முழுவதும் நாட்டு விரால் மீன் குஞ்சுகள் கிடைக்கும் விலை 2 ரூபாய் முதல் தமிழகம் முழுவதும் உங்கள் இடத்திற்கே

Air Horn | High court banned air horns in vehicles. கதிகலங்க வைக்கும் ஏர் ஹாரன் களுக்கு உயர் நீதிமன்றம் தடை.Air Horn | High court banned air horns in vehicles. கதிகலங்க வைக்கும் ஏர் ஹாரன் களுக்கு உயர் நீதிமன்றம் தடை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 28 2022 ஆம் ஆண்டில், ஒலி மாசுபாடு காரணமாக வாகனங்களில் ஏர் ஹாரன்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் அபராதம்,

Prostitution is also a professional Supreme Court Order | பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் தான்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய அம்சங்கள்Prostitution is also a professional Supreme Court Order | பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் தான்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய அம்சங்கள்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 1 பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் (தொழில் முறை) தான் என்றும், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)