33. சட்டம் யாருக்கு சாதகமானது? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
இந்திய அரசமைப்பு கோட்பாடு 13/3-படி, “சட்டம் என்பதில் ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்கு முறை, கிளைச் சட்டம், மரபு, மற்றும் பழக்க வழக்கம், என்ற அனைத்தும் அடங்கும்”.
பொதுவாக நாட்டில், நமக்கு எது சாதகமாக இருக்கிறது என்று பார்ப்பதில்தான், ஒவ்வொருவரும் குறியா இருக்கிறார்கள். பிரச்சினை தோன்ற இதுதான் முதல் காரணம். அதாவது, “தனக்கு இருக்கும் உரிமை, அடுத்தவருக்கும் இருக்கிறது என்பதை எவருமே உணர்வதில்லை”
தனக்கு இருக்கும் உரிமை, அடுத்தவருக்கும் உண்டு என்ற மிகச்சரியான கோட்பாட்டை, எவர் மிகச்சரியாக கடைப் பிடிக்கிறாரோ, அவர் தான் பிரச்சினை இல்லாத நபராக இருக்க முடியும்.
சட்டம் என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்று பார்த்தோம். இதில், “ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்கு முறை, கிளைச் சட்டம்” என்பன, அதற்கான சட்டப்பூர்வமான அதிகாரம் உள்ளவரால் பிறப்பிக்கப்படுவதாகும்.
ஆனால், “மரபு மற்றும் பழக்க வழக்கம் அப்படி அல்ல. எவர் எதை செய்கிறாறோ, அதுதான் சரி எனவும், அதை நியாயப்படுத்தவும், அப்படிச் செய்ப விரும்பும் நபர்களால் பயன்படுத்தப்படுவதாகும்”
இப்படி ஒவ்வொருவரும் தாம் செய்த செயலுக்கு, நியாயம் கற்பிக்க முற்பட்டால் என்ன ஆகும்? இறுதியில் நாடு, இடு காடாகவும், சுடுகாடாகவும்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, வற்புறுத்தி வரதட்சனை வாங்கிக் கொண்டு, திருமணம்.செய்ய கூடாது, என்பது மணக்கொடைத் தடுப்புச் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.