GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?

கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?

கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அதை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் 159 வருட பழமையான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ ஜனவரி 2018ல் ரத்து செய்தது. ஏன் என அறிய தொடர்ந்து படியுங்கள்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497 என்பது என்ன?

ஒரு ஆண், இன்னொரு ஆணுடைய மனைவியுடன் அவர் (கணவர்) அனுமதி இன்றி உடலுறவு வைத்துக் கொண்டால் ஐந்து ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும் அபராதமும் அளிக்கப்படும்.

ஏன் அது ரத்து செய்யப்பட்டது?

  1. திருமண பந்தத்துக்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டால் அதற்கான மொத்த பொறுப்பும் அதில் ஈடுபடும் ஆணிணுடையது மட்டுமே என்று கூறுகிறது. அதாவது, அந்த தகாத உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த வித தண்டனையும் கிடையாது. தகாத உறவை சம்பந்தப்பட்ட பெண்ணே தொடங்கி இருந்தாலும், தண்டனை ஆணுக்கு மட்டும் தான். இது பாலின பாகுபாடு அல்லவா?
  2. கணவருடைய அனுமதி இன்றி ஈடுபட்டால் மட்டுமே அது சட்டத்துக்கு புறம்பானது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணுடைய ஒப்புதல் தேவையில்லை என்று தானே அர்த்தமாகிறது? இது மனைவியை கணவனுக்கு சொந்தமான பொருள் போலவும், மனைவிக்கு சுய சிந்தனை மற்றும் சுய விருப்பு வெறுப்பு அற்றவராகவும் அர்த்தமாகிறது. இது சரி இல்லை அல்லவா?

எனவே, இந்த சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பு கூறும் சமமாக வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானதாகிறது. தகாத உறவில் ஈடுபடுவதை குடிமையியல் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறுவதற்கு காரணமாக கூறலாமே தவிர குற்றவியலில் அல்ல.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கல்விக்கடனுக்கு வங்கி அதிகபட்ச வட்டியோடு வசூல் செய்தால் அவர்களை கையாள்வது எப்படி?கல்விக்கடனுக்கு வங்கி அதிகபட்ச வட்டியோடு வசூல் செய்தால் அவர்களை கையாள்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ?காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 பாதிக்கப்பட்டோர் கழகம் தமிழ்நாடு **காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ? **தமிழ்நாடு காவல்துறை மக்கள் சாசனம் 1.காவல்

ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்.ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 வணக்கம் நண்பர்களே…! ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் கவனிக்க…! ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்:- ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் சட்டப்படி