GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?

கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?

கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?

கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அதை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் 159 வருட பழமையான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ ஜனவரி 2018ல் ரத்து செய்தது. ஏன் என அறிய தொடர்ந்து படியுங்கள்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497 என்பது என்ன?

ஒரு ஆண், இன்னொரு ஆணுடைய மனைவியுடன் அவர் (கணவர்) அனுமதி இன்றி உடலுறவு வைத்துக் கொண்டால் ஐந்து ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும் அபராதமும் அளிக்கப்படும்.

ஏன் அது ரத்து செய்யப்பட்டது?

  1. திருமண பந்தத்துக்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டால் அதற்கான மொத்த பொறுப்பும் அதில் ஈடுபடும் ஆணிணுடையது மட்டுமே என்று கூறுகிறது. அதாவது, அந்த தகாத உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த வித தண்டனையும் கிடையாது. தகாத உறவை சம்பந்தப்பட்ட பெண்ணே தொடங்கி இருந்தாலும், தண்டனை ஆணுக்கு மட்டும் தான். இது பாலின பாகுபாடு அல்லவா?
  2. கணவருடைய அனுமதி இன்றி ஈடுபட்டால் மட்டுமே அது சட்டத்துக்கு புறம்பானது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணுடைய ஒப்புதல் தேவையில்லை என்று தானே அர்த்தமாகிறது? இது மனைவியை கணவனுக்கு சொந்தமான பொருள் போலவும், மனைவிக்கு சுய சிந்தனை மற்றும் சுய விருப்பு வெறுப்பு அற்றவராகவும் அர்த்தமாகிறது. இது சரி இல்லை அல்லவா?

எனவே, இந்த சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பு கூறும் சமமாக வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானதாகிறது. தகாத உறவில் ஈடுபடுவதை குடிமையியல் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறுவதற்கு காரணமாக கூறலாமே தவிர குற்றவியலில் அல்ல.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கடன்பத்திரத்தில் உள்ள கையொப்பத்தை கடனாளி மறுத்துவிட்டால், சாட்சிகள் மட்டும் போதுமா❓கடன்பத்திரத்தில் உள்ள கையொப்பத்தை கடனாளி மறுத்துவிட்டால், சாட்சிகள் மட்டும் போதுமா❓

Views: 41 கடன்பத்திரத்தில் உள்ள கையொப்பத்தை கடனாளி மறுத்துவிட்டால், வெறும் கடன்பத்திரம் மற்றும் சாட்சிகள் மட்டும் போதுமா? கையொப்பம் நிரூபிக்கப்படாத நிலையில் பரிசீலனைத் தொகை வழங்கப்பட்டதாக சட்ட அனுமானம் எழுமா? இந்த வழக்கில், மனுதாரர், எதிர்மனுதாரர் தனது வணிகத் தேவைக்காக 27.07.2012

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்…பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்…

Views: 17 பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்… 7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரண பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி

வரதட்சணை தொடர்பான பிரச்சனை வந்தால் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?வரதட்சணை தொடர்பான பிரச்சனை வந்தால் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Views: 20 வரதட்சணை தொடர்பான பிரச்சனை வந்தால் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?👉 Step by Step – நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய வழிகாட்டி (இந்திய சட்டப்படி) 🟢 STEP 1: இது வரதட்சணையா? என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்களைச் சுற்றி இதெல்லாம்