GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் False Witness | பொய் சாட்சி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

False Witness | பொய் சாட்சி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பொய் சாட்சி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் எவ்வளவு திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளும் (Witnesses), சாட்சியங்களும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. “சாட்சிகள் தான் நீதிமன்றத்திற்கு கண்களும், காதும் ஆகும்.

நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்வது பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 191 லிருந்து 229 வரை தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பொய் சாட்சி சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொய் சாட்சி என்றால் என்ன?

சட்ட விதிமுறைகளுக்கோ அல்லது உண்மைமையே பேசுவதாக தான் எடுத்துக் கொண்ட பிரமாணத்திற்கோ கட்டுப்பட்ட ஒருவர், எந்தவொரு பொருள் பற்றியாவது அறிவிப்பு கொடுக்க வேண்டியிருக்கும் போது, தான் சொல்வது உண்மைக்கு புறம்பானது என்பதோ அல்லது அது பொய் என்பதோ தெரிந்தும், அவ்வாறு அவர் சொல்வது பொய் சாட்சி ஆகும்.

அப்படி அவர் பொய் சாட்சி சொல்வது வாய் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வேறு விதத்திலோ இருக்கலாம்.

தெரிந்ததை “தெரியாது ” என்று கூறுவதும், தெரியாததை “தெரியும் ” என்று கூறுவதும் பொய் சாட்சி தான்.

உதாரணமாக :

  1. சிவன் என்பவர் சங்கருக்கு ரூ. 1000/- கொடுக்க வேண்டும். முருகனுக்கு அந்த விபரம் ஏதும் தெரியாது. இருந்தாலும் முருகன் நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு, சிவன் பணம் கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றால் அது பொய் சாட்சி ஆகும்.
  2. நீதிமன்றத்தில் உண்மை பேசுவதாக பிரமாணம் எடுத்துக்கொண்ட முருகன் என்பவர், ஒரு ஆவணத்தில் உள்ள கையெழுத்து சிவனுடையது அல்ல என்று தெரிந்தும், அது சிவனுடையது என்று கூறினால் அது பொய் சாட்சி ஆகும்.

பிரிவு – 192 : புனையப்படும் பொய் சாட்சி :

நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்யப்படக்கூடிய பதிவேடு அல்லது ஆவணத்தில் உண்மைக்கு மாறான செய்தியை பதிவு செய்து வைப்பதும், ஒரு பொய்யான சந்தர்ப்பத்தை உண்மையாக தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும். அந்த பொய்யான தகவலால் ஒரு பொது ஊழியரோ அல்லது நீதிமன்றமோ உண்மைக்கு மாறான ஒரு கருத்தினை கொள்ள நேரிடும். எனவே தான் இக்குற்றம் புனையப்பட்ட சாட்சியினை உருவாக்குவதாக குறிப்பிடுகிறது.

உதாரணமாக :

  1. நிரபராதியான ஒருவர் மீது திருட்டு குற்றம் சாட்டும் எண்ணத்துடன் அவரது பை அல்லது பெட்டியில், அவருக்கு தெரியாமலே பிறருடைய நகைகளை வைப்பவர், பொய் சாட்சியினை உருவாக்கியவராவார்.
  2. நீதிமன்றத்தில் சாட்சியமாக காட்டப்படக்கூடிய ஒரு நிறுவனம் அல்லது கடையின் பதிவேடு அல்லது நோட்டு புத்தகத்தில் பொய்யான தவறை பதிவு செய்தல்

பிரிவு – 193 : பொய் சாட்சிக்கு தண்டனை :

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் எந்த நிலையிலாவது ஒருவர் வேண்டுமென்றே பொய் சாட்சி சொன்னாலும், நீதிமன்ற நடவடிக்கையின் எந்த நிலையிலாவது பயன்படுத்தும் வண்ணம் பொய் சாட்சி தயாரித்தாலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

பிரிவு 194 – : மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னால் :

தான் சொல்லும் சாட்சியினால் ஒருவரை அதிகபட்ச தண்டனையான மரண தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னாலோ அல்லது பொய் சாட்சி தயாரித்தாலோ அந்த நபருக்கு ஆயுள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனை, அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு – 195 : ஆயுள்தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னால் :

தாம் கொடுக்கும் சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள்தண்டனை அல்லது 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிந்தே ஒருவர் பொய் சாட்சி சொன்னால் அல்லது பொய் சாட்சியை உருவாக்கினால், அவர் எந்த மாதிரியான குற்றத்திற்கு சாட்சியம் அளித்தாரோ, அந்த குற்றத்திற்கு உரிய தண்டனை, பொய் சாட்சி கூறியவருக்கு விதிக்கப்படும்.

என்றென்றும் மக்கள் பணியில்
இரா. கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 Crpc sec 340 – நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

Act | Motor Vehicle Act-1988 | மத்திய மோட்டர் வாகனச் சட்டம் 1988Act | Motor Vehicle Act-1988 | மத்திய மோட்டர் வாகனச் சட்டம் 1988

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 45 தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும், மேற்படி அபராதம் தமிழ்நாடு நிர்ணயம் செய்த

RBI released a book of 40 pages to avoid from online financial frauds / இணைய வழி பண மோசடியிலிருந்தி தப்பிக்க,40 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.RBI released a book of 40 pages to avoid from online financial frauds / இணைய வழி பண மோசடியிலிருந்தி தப்பிக்க,40 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.