GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

மனு தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் மூத்த வக்கீல்கள் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். ரமணா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விழக்குகளை விசாரிக்கும்போது சில மூத்த வழகரிஞர்கள், முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளை அல்லது தாக்கல் செய்யபட்ட மனுக்களை விரைந்து பட்டியலிடவேண்டும் என்றும், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடுவது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்த சலுகையும் வழங்கபடுவது கிடையாது என இளம் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக குற்றசாட்டை முவைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல, உச்சநீதி மன்றம் தொடங்கிய உடன், என். ரமணா அமர்வில் கபில் சிபல் உட்பட சில மூத்த வழரிஞர்கள் ஆஜராகி, இதே போல் வழக்கு தொடரான முறையீட்டை தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இனிமேல் மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டுக்கு மூத்த வழக்கறிஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால், தினசரி வழக்கு பட்டியலை விசாரிக்க தாமதமாகிறது. மனுதாரருக்கு ஏதேனும் கோரிக்கை வைக்கவேண்டுமென்றால், அதனை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அவர்கள் வழக்கின் முக்கியத்துவம் குறித்த பரிந்துரையை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் பட்டியலிட்டு விசாரணை முர்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது எப்படி !மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது எப்படி !

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 Consumer Court case apply மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது எப்படி ! முதலில் யார் மீது

RTI Question and Replies from Police

RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும்,

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)