GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் தாயின் சொத்துக்களை தானமாக பெற்றுக்கொண்டு, தாயை பராமரிக்காததால். தானம் ரத்து.

தாயின் சொத்துக்களை தானமாக பெற்றுக்கொண்டு, தாயை பராமரிக்காததால். தானம் ரத்து.

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு வயதான தாய், தனக்குச் சொந்தமான பல கோடிகள் மதிப்புள்ள வீட்டைத் தன் மகள் மற்றும் மகனின் பெயருக்கு ‘தானப் பத்திரம்’ (Gift Deed) மூலமாக எழுதிக் கொடுத்தார். சொத்தை எழுதும் போது, பிள்ளைகள் இருவரும் தாயை இறுதிவரைத் தங்களோடு வைத்து, ‘ராணி போல’ கவனித்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

ஆனால், சொத்து கைக்கு வந்த சில நாட்களிலேயே பிள்ளைகளின் குணம் மாறியுள்ளது. முதியவர் என்றும் பாராமல் தாயை வீட்டை விட்டுத் துரத்தி, நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர். திக்கற்றுப் போன அந்தத் தாய், தனக்கு நீதி வேண்டி நீதிமன்றப் படியேறினார்…

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, சொத்தைப் பறித்துக் கொண்ட மகள் தரப்பில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது…

அவர், “தாயிடமிருந்து சொத்தை வாங்கும் போது போடப்பட்ட ‘தானப் பத்திரத்தில்’ (Gift Deed), அம்மாவை நான் தான் பராமரிக்க வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையோ அல்லது விதியோ எழுதி கையெழுத்திடப்படவில்லை. சட்டப்படி பத்திரத்தில் எழுதப்படாத போது, நான் அவரைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடினார்.

மகளின் இந்த மனிதாபிமானமற்ற வாதத்தைக் கேட்டு நீதிபதி கடும் அதிருப்தி அடைந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பின்வரும் அதிரடியான தீர்ப்பை வழங்கியது:

பத்திரத்தில் எழுதத் தேவையில்லை: பெற்ற தாயையோ அல்லது தந்தையையோ கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வமான கடமையாகும். அதற்கு சொத்துப் பத்திரத்தில் “நான் சோறு போடுவேன்” என்று பிரத்யேகமாக எழுதி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை…

பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகளுக்குச் சொத்தில் வாழ உரிமையில்லை எனக் கூறி, அந்தத் தாய் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த ‘தானப் பத்திரத்தை’ (Gift Deed) நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது….

ஏமாற்றிப் பிடுங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் அந்தத் தாய்க்கே சொந்தம் என்றும், பிள்ளைகள் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது….

இந்தத் தீர்ப்பு உணர்த்தும் சட்டம் (Senior Citizens Act) இந்தியாவில் “பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் – 2007” (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) நடைமுறையில் உள்ளது…..

இந்தச் சட்டத்தின்படி சொத்தை வாங்கிய பிறகு பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் சொத்துப் பத்திரத்தை (Gift Deed) ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு (RDO / Sub-Collector) உண்டு….

பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகளுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு….

சொத்துக்காகப் பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகும். “சட்டம் வெறும் காகிதத்தைப் பார்ப்பதில்லை, பெற்றவர்களின் நியாயமான கண்ணீரையும் பார்க்கும்” என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது….

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTI Question and Replies from Police

RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.

Views: 13 இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இரும்பு தடுப்புகளால், ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புக்களும், காவல் துறையில்

புதிதாகப் பிறந்த குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம்புதிதாகப் பிறந்த குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம்

Views: 93 குழந்தை கடத்தல் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன், அமலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த தொடர்ச்சியான உத்தரவுகளை பிறப்பித்தது. குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்குவதை

Revenue Department of Tamilnadu | தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்புRevenue Department of Tamilnadu | தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு

Views: 51 தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு)….. (TN GOVT REVENUE DEPARTMENT) ….. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன.