GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Interlocutory application (IA) எனப்படும் இடைக்கால மனு பற்றிய விபரம்.

Interlocutory application (IA) எனப்படும் இடைக்கால மனு பற்றிய விபரம்.

நீதிமன்றத்தில் சொல்லப்படுகிற IA என்றால் என்ன

நீதிமன்ற வழக்குகளில் I A என்ற சொல் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு சொல் ஆனால் அதன் முழுமையான விளக்கம் என்ன என்று பெரும்பாலான மக்களுக்கு தெரியாது அதற்கான விளக்கத்தை இந்த கட்டுரையில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

I.A பெட்டிஷனின் அர்த்தம் என்ன?

I.A பெட்டிஷன் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?

I.A பெட்டிஷன் நீதிமன்ற நடைமுறைகள் என்ன?

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தவர்கள் I.A என்ற வார்த்தையை பல முறை கேள்விப்பட்டு இருப்பீர்கள், IA என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்றால்

I. A” என்பது Interlocutory Application, Interim Application,and Impleading application என்று அறியப்படுகிறது.

Interlocutory Application-இடைநிலை விண்ணப்பம்

Interim Application-இடைக்கால விண்ணப்பம்

Impleading application-உள்வாங்கும் விண்ணப்பம்

I.A பெட்டிஷன் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?

நீதிமன்ற வழக்குகளில் சூழ்நிலைக்கேற்ப இந்த I.A மனுக்கள் தாக்கல் செய்யபடுகிறது. 

இதை தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அனைத்து I.A மனுக்களும் இடைக்கால விண்ணப்பங்கள் (இடைச்சொருகல் விண்ணப்பங்கள்) என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இனி இதை பற்றி இடைக்கால விண்ணப்பம் என்றே குறிப்பிடுகிறேன் எளிதாக புரிந்து கொள்வதற்காக,

இந்த இடைக்கால விண்ணப்பம் என்பது முக்கிய வழக்கு நிலுவையில் இருக்கும் போது சில இடைக்கால நிவாரணம் அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கோரி சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் செய்யப்படும் கோரிக்கையாகும்.

இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அல்லது உடனடி கவனம் தேவைப்படும் உத்தரவைப் பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் போது செய்யப்படும் விண்ணப்பமாகும்.

ஒரு சொத்தில் உரிமை யாருக்கு என்று வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது வாதியோ அல்லது பிரதிவாதியோ அந்த வழக்கு சொத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தால் அதை தடை செய்ய உடனடியாக நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி தடை உத்தரவு பெற வேண்டும்

இதற்காக வாய்மொழியாக சொல்லி உத்தரவு பெற முடியாது அதற்காக புதிய விண்ணப்பம் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் உத்தரவை நீதிமன்றத்தில் பெற வேண்டும்

இந்த புதிய விண்ணப்பத்தை வழக்கு நடந்து கொண்டிருக்கும் இடையில் இடைக்காலத்தில் தாக்கல் செய்வதால் தான் இதை இடைக்கால விண்ணப்பம் I.A என்று அழைப்படுகிறது.

இடைக்கால விண்ணப்பங்கள், தடை கோருதல், தற்காலிக தடை (temporary stay), பெறுநர்களை நியமனம் செய்தல்(appointment of receivers), மனுக்களில் திருத்தம் செய்தல் (amendment of pleadings), கூடுதல் ஆதாரங்களை சேர்க்க அனுமதி கோருதல் போன்ற பல்வேறு விஷயங்களைத் தீர்ப்பதற்காக தாக்கல் செய்யப்படுகின்றன.

இடைக்கால விண்ணப்பங்கள் என்பது அடிப்படையில் இது இடைக்கால நிவாரணம் பெற அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் நடைமுறை சட்ட செயல்முறை ஆகும்.

I.A பெட்டிஷன் நீதிமன்ற நடைமுறைகள் என்ன?

ஒரு தரப்பினர் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் போது, அது வழக்கமாக தனித்தனியாக எண்ணப்பட்டு, “IA எண். X இன் YYYY” போன்ற ஒரு தனித்துவமான தலைப்பு எண் வழங்கப்படுகிறது.

வழக்கின் தகுதி மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பத்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.

நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட வழக்கை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சட்டங்களைப் பொறுத்து இடைநிலை விண்ணப்பங்கள் தொடர்பான குறிப்பிட்ட விதிகள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற அதிகார வரம்பில் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

மேலும் சட்ட ஆலோசனை பெற
விரும்பினால் அழைக்கவும்👇
தேசிய சட்ட நீதி இயக்கம் சட்ட உதவி மையம் 9751438854

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Equal Justice for Everyone

Civil Judge Exam2023 | March of Criminal Law Class by Adv G.Karupasamy Pandian, MaduraiCivil Judge Exam2023 | March of Criminal Law Class by Adv G.Karupasamy Pandian, Madurai

Views: 5 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?

Views: 47 பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம்

வழக்கறிஞர் தனது கட்சிக்காரருக்காக RTI யில் தகவல் கேட்க எந்தவித தடையேதுமில்லைவழக்கறிஞர் தனது கட்சிக்காரருக்காக RTI யில் தகவல் கேட்க எந்தவித தடையேதுமில்லை

Views: 13 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.