GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

காசோலை வழக்கு அசன்னா என்பவர் ரூ. 15 லட்சத்தை சிற்றரசு என்பவரிடமிருந்து கடனாக பெற்றிருந்தார் அந்த கடன் தொகை யை திருப்பி செலுத்துவதற்காக ஒரு காசோலையை சிற்றரசுவுக்கு கொடுத்தார் அதை பணம் பெறுவதற்காக வங்கியில்செலுத்திய போது போதிய பணமில்லை என்று திருப்பப்பட்டு விட்டது அதனால் சிற்றரசு பணம் கேட்டு ஒரு அறிவிப்பை அசன்னாவுக்கு அனுப்பினார் அதன்பிறகும் அசன்னா பணத்தை திருப்பி தராததால் சிற்றரசு அவர்மீது காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரணையின் போது அசன்னா
ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்குப் சிற்றரசுவுக்கு வசதி இல்லை என்றும் 4 நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை கடனாக கொடுத்ததாக கூறியுள்ள போதிலும் அந்த 4 நண்பர்களை சாட்சிகளாக நீதிமன்றத்தில் சிற்றரசு விசாரிக்கவில்லை என்றும் கூறி வாதிட்டார் ஆனால் விசாரணை நீதிமன்றம் அசன்னாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பை எதிர்த்து அசன்னா மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. G. சொக்கலிங்கம் விசாரித்தார்.

அசன்னா காசோலை கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார் அசன்னா காசோலை கொடுத்ததை மறுத்துரைக்காத நிலையில் அந்த காசோலைக்குரிய தொகை அவருக்கு வழங்கப்பட்டு விட்டதாக மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 118 ன் அனுமானிக்கப்பட வேண்டும் பணம் கடன் வாங்கி கொடுத்ததை நிரூபிக்க சிற்றரசு 4 நண்பர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. R. C. NO – 744/2016

P. R. அசன்னா Vs சிற்றரசு
2016-3-MWN-CRL-DCC-73

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்?மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்?

Views: 14 மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்? மறுஆய்வு மனுவை மேல்முறையீட்டை பரிசீலிப்பது போல் நீதிமன்றம் பரிசீலிக்க இயலுமா? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றம் ஏற்க முடியும்? சிபிசி பிரிவு

பணம் செலுத்தியும் நில அளவை செய்துத் தராவிட்டால் எப்படி சட்ட அறிவிப்பு (Legal notice) கொடுப்பது?பணம் செலுத்தியும் நில அளவை செய்துத் தராவிட்டால் எப்படி சட்ட அறிவிப்பு (Legal notice) கொடுப்பது?

Views: 42 நில அளவை செய்வதற்கு பணம் செலுத்தியும் அளவீடு செய்யவில்லையா.. கவலை வேண்டாம் நீங்களே சட்ட அறிவிப்பானை அனுப்பிவிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு தொகையை பெறலாம்.. மாதிரி அறிவிப்பானை: வழக்குத் தொடருமுன் அறிவிப்பானை. _ மாவட்டம், _

Legal Notice | What is that? Who can serve? for what | சட்ட அறிவிப்பு என்றால் என்ன? யார் அனுப்பலாம்? எதற்கு அனுபலாம்.Legal Notice | What is that? Who can serve? for what | சட்ட அறிவிப்பு என்றால் என்ன? யார் அனுப்பலாம்? எதற்கு அனுபலாம்.

Views: 29 வக்கீல் நோடீஸ் என்ற சட்ட அறிவிப்பு என்ற லீகல் நோட்டிஸ். அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிச்சாமி. எண்ணமோ எதோன்னு எல்லாரும் நினைக்கக்கூடிய பலரும் பயப்படக்கூடிய வக்கீல் நோட்டீஸ் என்று சொல்லக்கூடிய வழக்கறிஞர் அறிவிப்பு பத்தி நீங்க