GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத நிலையில் மனுதாரர் ஆகிய நீங்கள் கீழ்க்காணும் நினைவூட்டும் விண்ணப்பத்தை செய்ய முடியும் பயனடைய முடியும் நீங்கள் பயன்படுத்துவீர்கள் தானே?

மனுதார்:

பெறுநர்:

பொருள்:
நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159வது பிரிவுப்படி நினைவூட்டும் விண்ணப்பம்.

பார்வை:
……………………………………. அலுவலகத்திறகு மனுதாரரால் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பிய மனு. நாள்…………………………

1) மனுதாரராகிய நான் மேலே காணும் முகவரியில் நிரந்தரமாக/தற்காலிகமாக (வாடகைக்கு) குடியிருந்து வருகிறேன். பார்வையில் காணும் கோரிக்கை மனுவினை கடந்த…………………………… தேதியன்று அனுப்பி இன்றுடன்………………….. நாட்கள் முடிவடைந்து விட்டது. நாளது தேதி வரை எனது கோரிக்கை அரசால் நிறைவேற்றுகை செய்யப்படவில்லை. இது தமிழ்நாடு அரசாணை எண்.73/2018 நாள்.11.06.2018 இல் கண்டுள்ள நெறிகளின்படி இது குற்றமுறு நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும் மேற்காணும் அரசாணை விதிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பொது மக்களிடம் பெறுகின்ற கோரிக்கை மனுவினை 30 தினங்களுக்குள் நிறைவேற்றுகை செய்ய வேண்டும் என்பதை உறுதி படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண். W. P. No. 20527 /2014 and M. P. No. 1/2014 நாள்.01.08.2014 என்ற வழக்கு தீர்ப்புரையில் உறுதி செய்து தீரப்பு வழங்கியுள்ளது. மேற்காணும் அரசாணை மற்றும் தீரப்பு ஆகியவை எனது இந்த கோரிக்கை மனுவுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்பட்டு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159 வது பிரிவுப்படி நினைவூட்டும் முகமாக தங்களுக்கு பணிந்து அனுப்ப படுகிறது.

2) இந்த நினைவூட்டும் விண்ணப்பம் தங்களுக்கு கிடைத்த 15 தினங்களுக்குள் எனது கோரிக்கையை நிறைவேற்றுகை செய்ய தவறும் பட்சத்திலும் அல்லது பதில் வழங்க தவறினாலும் தங்களின் பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை என்றாலும் நீங்கள் உங்களின் கடமையை செய்ய தவறியுள்ளீர்கள் என மனுதாராகிய என்னால் கருதப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணமாகிவிடும் என்பதையும், அதற்காகும் வேலையிழப்பு /வீண் செலவினங்கள்/வருமான இழப்பு /மன உளைச்சல் ஆகியவற்றுக்கு தாங்களே தார்மீக பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் இதன் மூலம் நினைவூட்டப்படுகிறது.
மனுதார்

தேதி:
இடம்:

இணைப்பு
பார்வையில் காணும் கோரிக்கை மனு நாள்…………………….,…….. நகல்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CM Cell எண்-1100 வழியாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தங்கள் குறைகளை பதிவு செய்வது எப்படி?CM Cell எண்-1100 வழியாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தங்கள் குறைகளை பதிவு செய்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 \ குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Caste and Religion are not necessary to note in school certificates | பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதி மன்றம் ஆணை (Download)Caste and Religion are not necessary to note in school certificates | பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதி மன்றம் ஆணை (Download)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 54 `No Caste No Religion’ பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என அரசாணை,தமிழ்நாடு அரசு. நகலை பெற W.P.No.18488

பொய் புகார் அளித்தவர் மீது எப்படி வழக்கு தொடுப்பது.பொய் புகார் அளித்தவர் மீது எப்படி வழக்கு தொடுப்பது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)