GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத நிலையில் மனுதாரர் ஆகிய நீங்கள் கீழ்க்காணும் நினைவூட்டும் விண்ணப்பத்தை செய்ய முடியும் பயனடைய முடியும் நீங்கள் பயன்படுத்துவீர்கள் தானே?

மனுதார்:

பெறுநர்:

பொருள்:
நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159வது பிரிவுப்படி நினைவூட்டும் விண்ணப்பம்.

பார்வை:
……………………………………. அலுவலகத்திறகு மனுதாரரால் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பிய மனு. நாள்…………………………

1) மனுதாரராகிய நான் மேலே காணும் முகவரியில் நிரந்தரமாக/தற்காலிகமாக (வாடகைக்கு) குடியிருந்து வருகிறேன். பார்வையில் காணும் கோரிக்கை மனுவினை கடந்த…………………………… தேதியன்று அனுப்பி இன்றுடன்………………….. நாட்கள் முடிவடைந்து விட்டது. நாளது தேதி வரை எனது கோரிக்கை அரசால் நிறைவேற்றுகை செய்யப்படவில்லை. இது தமிழ்நாடு அரசாணை எண்.73/2018 நாள்.11.06.2018 இல் கண்டுள்ள நெறிகளின்படி இது குற்றமுறு நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும் மேற்காணும் அரசாணை விதிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பொது மக்களிடம் பெறுகின்ற கோரிக்கை மனுவினை 30 தினங்களுக்குள் நிறைவேற்றுகை செய்ய வேண்டும் என்பதை உறுதி படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண். W. P. No. 20527 /2014 and M. P. No. 1/2014 நாள்.01.08.2014 என்ற வழக்கு தீர்ப்புரையில் உறுதி செய்து தீரப்பு வழங்கியுள்ளது. மேற்காணும் அரசாணை மற்றும் தீரப்பு ஆகியவை எனது இந்த கோரிக்கை மனுவுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்பட்டு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159 வது பிரிவுப்படி நினைவூட்டும் முகமாக தங்களுக்கு பணிந்து அனுப்ப படுகிறது.

2) இந்த நினைவூட்டும் விண்ணப்பம் தங்களுக்கு கிடைத்த 15 தினங்களுக்குள் எனது கோரிக்கையை நிறைவேற்றுகை செய்ய தவறும் பட்சத்திலும் அல்லது பதில் வழங்க தவறினாலும் தங்களின் பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை என்றாலும் நீங்கள் உங்களின் கடமையை செய்ய தவறியுள்ளீர்கள் என மனுதாராகிய என்னால் கருதப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணமாகிவிடும் என்பதையும், அதற்காகும் வேலையிழப்பு /வீண் செலவினங்கள்/வருமான இழப்பு /மன உளைச்சல் ஆகியவற்றுக்கு தாங்களே தார்மீக பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் இதன் மூலம் நினைவூட்டப்படுகிறது.
மனுதார்

தேதி:
இடம்:

இணைப்பு
பார்வையில் காணும் கோரிக்கை மனு நாள்…………………….,…….. நகல்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

(Compoundable offence) நீதிமன்றத்தின் முன்னனுமதி இல்லாமல் சமரசம்செய்து கொள்ளும் குற்றங்கள் (Compoundable offence)(Compoundable offence) நீதிமன்றத்தின் முன்னனுமதி இல்லாமல் சமரசம்செய்து கொள்ளும் குற்றங்கள் (Compoundable offence)

Views: 11 நீதிமன்றத்தின்_முன்அனுமதி இல்லாமல் சமரசம்செய்து கொள்ளும் குற்றங்கள் (#Compoundable #offence) நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் #குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் (#IPC) பிரிவுகள் 298, 323, 334, 341, 342, 352, 355, 358,

நத்தம் நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு.நத்தம் நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு.

Views: 33 நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு. *அரசாணை நிலை எண்: 1971 வருவாய்த் (நி. அ. 2) துறை, நாள்:  14.10.1988* இன் கீழ் நத்தம் நிலவரித் திட்டத்தின் படி தனி வட்டாட்சியரால் வழங்கப்படும் பட்டாக்களின் மீது

Crpc-200 image

Private complaint u/s 200 Crpc, How to raise the in the Court? நீதிமன்றத்தில் u/s 200 Crpc கீழ் எவ்வாறு தனிப்புகார் அளிக்கவேண்டும்?Private complaint u/s 200 Crpc, How to raise the in the Court? நீதிமன்றத்தில் u/s 200 Crpc கீழ் எவ்வாறு தனிப்புகார் அளிக்கவேண்டும்?

Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.