GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வழக்கறிஞர் ஆஜராக்காத காரணத்தால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது எக்ஸ்பார்ட்டி தீர்ப்போ வழங்கக்கூடாது

வழக்கறிஞர் ஆஜராக்காத காரணத்தால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது எக்ஸ்பார்ட்டி தீர்ப்போ வழங்கக்கூடாது

கட்சிக்காரர் ஒரு வழக்கறிஞரை நியமித்து வழக்கை தாக்கல் செய்கிறார். பிற்பாடு ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வாய்தா நாளில் வழக்கறிஞரால் மேற்படி வழக்கில் ஆஜராக முடியவில்லை. அதனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது எக்ஸ்பார்ட்டியாக உத்தரவோ பிறப்பிக்க முடியுமா?

பெரும்பாலும் நீதிமன்றங்கள் வாய்தா தேதியன்று வழக்கில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்று தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. வழக்கறிஞர் கட்சிக்காரரின் முகவராக செயல்படுகிறார். அதாவது கட்சிக்காரருக்காக வழக்கறிஞர் வழக்கில் ஆஜராகிறார்.

வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய முடியாது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் ” Malkiat singh and Others Vs Joginder singh and Others (1997- 3 – CTC – CIVIL – 619)” என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு வழக்கில் வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்து முறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில், அவர்களுடைய வழக்கறிஞர், வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் வழக்கு தரபெபினர்களுக்கு அதுகுறித்து அறிவிப்பு அனுப்ப வேண்டும். அவ்வாறு ஒரு அறிவிப்பை அனுப்பாமல் வழக்கை மேற்கொண்டு நடத்தக்கூடாது. தள்ளுபடி செய்யக்கூடாது, ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிக்கக்கூடாது.

எனவே இனி வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அல்லது ஒருதலைபட்சமாக தீர்ப்பளிக்கப்பட்டால் வழக்கை மேற்கொண்டு விசாரணைக்கு ஏற்க கோரி மனுத்தாக்கல் செய்யும்போது இந்த தீர்ப்பை மனுவில் சுட்டிக்காட்டினால் நிச்சயமாக வழக்கு மீண்டும் கோப்பிற்கு எடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வங்கி அல்லது தனியார் கடன் வசூல் ஊழியர்களின் கட்டுப்பாடுகளும் கடமைகளும்.வங்கி அல்லது தனியார் கடன் வசூல் ஊழியர்களின் கட்டுப்பாடுகளும் கடமைகளும்.

Views: 9 வாங்கிய கடனை ஒழுங்காக கட்டிவிடுஒரு கடன் இரண்டு கடன் இருக்கும் பொழுது வந்து மிரட்டினால் அவர்களுக்கு மட்டும் பொருந்தும் வாங்கிய காசை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனிக்கவும் பைனான்ஸ் / NBFC (Non Banking Finance Company)

வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் 2017 ஓர் பார்வை .வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் 2017 ஓர் பார்வை .

Views: 234 வீட்டு உரிமையாளர் எதிர் வாடகைதாரர். இந்த புதிய சட்டத்தின் பெயர், TAMILNADU REGULATION OF RIGHTS AND RESPONSIBILITIES OF LANDLORDS AND TENANTS ACT 2017 என்பதாகும் . 22-02-2019 முதல் அமுலுக்கு வந்திருக்கும் புதிய வாடகை