GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Civil procedure code points |உரிமையியல் விசாரணை முறை விதிகள் குறிப்புகள்.

Civil procedure code points |உரிமையியல் விசாரணை முறை விதிகள் குறிப்புகள்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தாமதிக்கபடும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் இதை உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் முதல் இன்று வரை வாயளவு பிரச்சாரமாகமாக மட்டுமே கடை பிடித்து நீதிக்கு தண்டணை வழங்கும் நீதிமன்றங்கள் குறித்து இன்று காண்போமா?

உரிமையியல் விசாரணை முறை விதிகள் : உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 – ன்- கட்டளை 7 – ன் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்கை ( விசாரணைக்கு ஏற்றதும் கட்டளை 5 விதி 1 ( 1 ) -ன் கீழ் பதிலுரையை முப்பது நாட்களுக்குள் தாக்கல் செய்ய கோரி எதிர்மனுதார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப வேண்டும் .

அழைப்பானை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்ட தேதியில் இருந்து எழு நாட்களுக்குள் மனுதார் அதற்கென நீதிமன்றம் விதிக்கும் கட்டணத்தை கட்டளை 7 விதி 9 – ன் கீழ் செலுத்த வேண்டும் . விதி விலக்காக நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் அல்லது 90 நாட்களுக்குள் பதிலுரை தாக்கல் செய்யப்பட வேண்டும் .

பதிலுரையை பொருத்து புகாரை மெய்பிக்க தேவையான அல்லது மனுவை பொருத்து மனுவை பொய்பிக்கத்தேவையான ஆவணச்சான்றுகள் குறிப்பிட்டு அவைகளை தாக்கல் செய்து சாண்றாவனமாக குறியிட ஆட்சேபணை ஏதும் இருக்கிறதா எனவும் , எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பி சார்பு செய்யப்பட்ட . தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்க கட்டளை 12 விதி 2 – ன் கீழ் கோர வேண்டும் . கட்டளை 12 விதி 2 – ன் * கீழ் அறிவிப்பை பெறும் தரப்பினர் , கட்டளை 12 விதி 2 அ – ன் கீழ் இது குறித்த தெளிவான தமது கருத்தை நீதிமன்றத்திற்கும் , எதிர்தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும் . இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்தில் அல்லது பதிலில் ஒப்புதல் ஏதேனும் இருந்தால் நீதிமன்றம் தனது விருப்பம் போல் அல்லது தரப்பினர்களின் மனுவை பெற்று பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்பாக ஒப்புதலின் அடிப்படையில கட்டளை 12 விதி 6 – ன் படி உடனே தீர்ப்பு வழங்க வேண்டும் .

இப்படி தீர்ப்பரை வழங்க இயலாத போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள
ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்து முடிக்கும் பொருட்டு எழு 21 வினாக்களை எழுத வேண்டும் .

அதாவது மனுதார் கோரியுள்ள உரிமை சட்டபடி சரியானது தானா என முடிவு செய்ய தேவையான வினாக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு உருவாக்க வேண்டும் . இப்படி வினாக்களை உருவாக்குவதற்கு வேறு ஆவணம் ஏதும் தேவை என நீதிமன்றம் கருதும் போது அதை வைத்திருப்பவருக்கு அதை தாக்கல் செய்ய கோரி நீதிமன்றம் உத்தரவை அனுப்பி விட்டு வினாக்கள் எழுதுவதை ஏழு நாட்களுக்குள்ளாக கட்டளை 14 விதி 4 – ன் படி ஒத்தி போட வேண்டும் .

இதில் எதிர்மனுதாரர்கள் பலர் இருந்து அதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் வழக்கை ஒப்புக் கொள்ளும் போது தக்கது எனகருதும் தீர்ப்பை கட்டளை 15 விதி 2 – ன் கீழ் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் . மற்ற எதிர்மனுதார்களுக்கு எதிராக மட்டுமே வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டும் .

எழு வினாக்கள் வனையப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வழக்கு தரப்பினர்கள் தமது தரப்பில் சாட்சியாக அழைக்கப்பட வேண்டிய அல்லது ஆவணம் தாக்கல் செய்யப்படவேண்டிய சாட்சிகள் குறித்த பட்டியல் மனுவை கட்டளை 16 விதி 1 – ன்கீழ் தாக்கல் செய்ய வேண்டும் .

அப்படி அழைக்கப்படும் சாட்சிகள் தங்களின் வாக்கு மூலத்தை பிரமாணமாக கட்டளை 18 விதி 4 – ன் கீழ் தாக்கல் செய்யலாம் .

இதனை அடுத்து சாட்சிகள் தொடர்ந்து விசாரணை செய்யப்படவேண்டும் . கட்டளை 17 விதி 1 – ன் படி போதிய காரணம் காட்டப்பட்டால் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைக்கலாம் .

விசாரணைதுவங்கிய பிறகு அதாவது சாட்சிகள் விசாரணை ஆரம்பம் ஆனதும் எந்ததரப்புக்கும் அதிகபட்சமாக மூன்று முறைக்கு மேல் வாய்தா வழங்க கூடாது .

சாட்சிகள் விசாரணைமுடிந்ததும் தரப்பினர்கள் எழுத்து மூலமான தமது வாதுரையைகட்டளை 18 விதி -2 ( 3 – அ ) -ன்கீழ் தாக்கல் செய்யலாம் .

இதற்கான கால நிர்ணயத்தை நீதிமன்றம் தான் கட்டளை 18 விதி 2 ( 3 – ஈ ) முடிவு செய்யும் , வாதுரைதாக்கல் செய்யப்பட்ட பிறகு கட்டளை 20 விதி 1 – ன் படி உடனடியாக அல்லது முப்பது நாட்களுக்கள் தீர்ப்பு பகர வேண்டும் அப்படி இயலாத போது அதிக பட்சமாக 60 நாட்களில் தீர்ப்பு பகர வேண்டும் . தீர்ப்புரை செய்த பிறகு கட்டளை 20 விதி 6 அ – ன் கீழ் உடனே தீர்ப்பானை அல்லது 15 நாட்களுக்குள் தீர்ப்புரை வரைவதை உறுதி செய்ய வேண்டும் .

வழக்குகளில் நகல் பெறுதல் : அனைத்து வழக்குகளிலும் நகல் பெற கால அவகாசம் எவ்வளவு எனசட்ட விதிகள் இருப்பதாக தெரியவில்லை .

எப்படி இருந்தாலும் , எந்த வழக்காக இருந்தாலும் வழக்கை முடிக்கவே குறைந்த பட்ச கால அளவு தான் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அதிக பட்சம் நகல் வழங்க ஒரு வாரத்திற்குள் தான் கால அவகாசம் இருக்கும் என உறுதியாக நம்பலாம் .

ஏனெனில் வழக்கு தொடர்பான பதிவுகளின் நகலை அப்படியே ஜெராக்ஸாக பெறலாம் .

இப்ப புரியிதுங்களா நாட்டில் நடந்து வருகிற நீதிமன்றங்கள் எல்லாம் நீதிக்கு தண்டணைதான் கொடுத்து வருகின்றன என்று . என்ன யோசிக்கிறீங்க?

கீழ் நீதிமன்றங்களுக்கு தானே இந்த கால அவகாசம் . அப்புறம் எப்படி எல்லா நீதிமன்றமும் நீதிக்கு தண்டணை தான் அப்படீன்னு சொல்ல முடியுங்கிறீங்களா ?

ஏங்க , விசாரணை நீதிமன்றமே இவ்வளவு நாள்ல வழக்க முடிக்கனும் அப்படீங்கும் போது மேல் நீதிமன்றத்துக்கு இதுல என்ன வேலை இருக்கு ? கீழ் நீதிமன்றம் என்னென்ன தவறு செய்திருக்கு அல்லது என்ன விதத்தில் கையாண்டிருக்கு அப்படீன்னு கண்காணித்து முடிவு சொல்ற வேலை தானே ? இதுக்கு குறைந்த பட்ச கால அவகாசம்தானே இருக்க முடியும் ? அதிக பட்சம் இதுக்கு எவ்வளவு இருக்கலாம் ஒன்றரை மாதம் பத்தாதா ?

இந்த கணக்கு படி பாத்தா அமர்வு நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் சேத்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் தானே ?

இதை எதையும் கடைப்பிடிக்காமல் நீதிமன்றங்கள் நடந்தால் அந்த நீதிமன்றத்துக்கு எந்த #நீதிமன்றம் தண்டணைவழங்க போகிறது ?

எனக்கு தெரிய அனைத்து வகையான வழக்குகளும் முடிவடைய அதிகபட்சமாக ஆறு மாத கால அவகாசம் தான் அந்தந்த சட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமா இருக்கா ? ஆம் உண்மை தான் .

இதில் இறுதியாக கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 – ல் தான் . இதில் கடந்த 2002 – ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளது .

இப்படி வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எல்லாம் மிக சரியாக உள்ளதா என்பதை நீங்களும் தான் சரிபார்த்து கொள்ளுங்களேன் .

சரி பார்க்கிறது மட்டுமில்ல . இதை தவறாம கடைபிடிக்கவும் வேணும் .

இரா.கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நில அளவை எவ்வாறு கணக்கிடுவது?நில அளவை எவ்வாறு கணக்கிடுவது?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 நில அளவை (தமிழ்நாடு) தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தின் அளவு மதிப்பு (பரப்பை) குழி, வேலி, மா, ஏக்கர் என பேச்சு

சட்டத்திற்கு எதிராக செயல்படும் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லைசட்டத்திற்கு எதிராக செயல்படும் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லை

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 93 ஒரு ஹிந்து கீதை தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒரு முஸ்லிம் குர்ஆன் தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒரு கிறிஸ்டியன் பைபிள் தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒவ்வொரு

Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 எங்களிடம் வருடம் முழுவதும் நாட்டு விரால் மீன் குஞ்சுகள் கிடைக்கும் விலை 2 ரூபாய் முதல் தமிழகம் முழுவதும் உங்கள் இடத்திற்கே

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)