GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Green Tribunal | What is that? பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன?

Green Tribunal | What is that? பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன?

Green Tribunal | What is that? பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே “விரைவு கோர்ட்’ முறையில் விசாரிக்கிறது.

இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது :

National Green Tribunal

Faridkot House, Copernicus Marg, New Delhi-110 001

Phone : 011-23043501, Fax : 011-23077931

Email : rg.ngt@nic.in, Web : http://www.greentribunal.gov.in

நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.

சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.

இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.

இதன் தென்மண்டல அலுவலகம் சென்னை, அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரிய அலுவலக கட்டடத்தில் இயங்குகிறது.

முகவரி :

தேசிய பசுமை தீர்ப்பாயம்

தென்மண்டலம், No.:950/1,

முதலாவது, இரண்டாவது மற்றும் மூ்ன்றாவது தளங்கள்

பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம்,

சென்னை=600 106.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?

Views: 51 பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம்

What law says | சட்டம் சொல்வதென்ன?What law says | சட்டம் சொல்வதென்ன?

Views: 12 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட, 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4). 2, நீதிபதி தவறு செய்தால், 7 வருடம் சிறை. IPC-217. 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து, அப்பீல் செய்யலாம். CRPC

வருவாய் ஆய்வாளரின் (REVENUE INSPECTOR) கடமைகளும் பொறுப்புகளும்வருவாய் ஆய்வாளரின் (REVENUE INSPECTOR) கடமைகளும் பொறுப்புகளும்

Views: 47 அ: மர மதிப்பு நிர்ணயம் செய்தல் ஆ: நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல். இ) கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல். ஈ) வருவாய் வசூல் சட்டம்