GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Fault cibil core penalty 4 lakhs | தவறாக சிபில் பட்டியலில் சேர்த்ததற்கு 4 லட்சம் அபராதம்.

Fault cibil core penalty 4 lakhs | தவறாக சிபில் பட்டியலில் சேர்த்ததற்கு 4 லட்சம் அபராதம்.

Wrong CIBIL score
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தந்தை ஏற்ற வீட்டுக்கடனை தெரிவிக்காமல், மனைவி, மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு.

தந்தை பெற்ற வங்கிகடனை தெரிவிக்காமல் அவர் இறந்த பின்னர் மனைவி மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நுகர்வோர் கோர்ட் தீர்பளித்தது.

கரூர் மாவட்டத்தை சேந்தவர் பழனிச்சாமி, இவர், கரூரில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ 20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றிருந்தார். அந்த கடனுக்கு மாத தவணைத்தொகை செலுத்திவந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் திரு பழனிச்சாமி உயிரிழந்துவிட்டார். பழனிச்சாமி கடன் பெற்றபோது கடன் தொகையை செலுத்தி வரும்போது, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த கடன் தொகையை காப்பீட்டு நிறுவனம் மூலம் ஈடு செய்யும் வகையில் கடன் தொகைக்கு காப்பீடும் எடுத்து, அதற்கான மாத சந்தாவும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பழனிச்சாமியின் மனைவி லட்சுமி, மகன் சதீஷ்குமார் ஆகியோருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வங்கி தரப்பில், இருவரையும் தங்கள் கடந்தாரராக அறிவிப்பு செய்தது.

இது குறித்து தகவல் அறிந்த சதீஷ் குமார் வாங்கியை தொடர்புகொண்டபோது கடன் தொகை பற்றி அவர்களிடம் தெரிவிக்காமல், கடன் தொகையை திரும்ப செலுத்தாதவர்கள் சதீஷ் குமார் பெயர் பட்டியலில் சேர்க்கபட்டது.

வங்கியில் நடவடிக்கையால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த சதீஷ்குமார், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ரூ 9 லட்சத்து பத்தாயிரம் நஷ்ட ஈடு, மற்றும் செலவுத்தொகை கேட்டு புகார் ஒன்றை அளித்தார்.

இதனை விசாரணை செய்த நுகர்வோர் ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் நேற்று வழங்கிய உத்தரவில், காப்பீடு குறித்து விபரம் தெரிவிக்காத காரணத்திற்காக ரூ 1 லட்சமும், சிபிலில் சதீஷ்குமார் மற்றும் அவரது தாய் பெயரை தவறாக சேர்த்ததற்காக ரூ 3 லட்சமும் , மொத்தம் 4 லட்சம், அத்துடன் வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும், அத்துடன் செலவுத்தொகை ரூ 7 ஆயிரம் சேர்த்து வழங்கவண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்தார்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத

நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) சம்மந்தமான முழு விபரம்.நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) சம்மந்தமான முழு விபரம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) தனியாருக்கு சொந்தமில்லாத அரசு வசமுள்ள நிலங்கள், அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், புறம்போக்கு நிலங்கள்

Central Vigilance Commission hand-book | மத்திய கண்காணிப்பு ஆணையம் கையேடுCentral Vigilance Commission hand-book | மத்திய கண்காணிப்பு ஆணையம் கையேடு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)