GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Pocso | How to escape a false Pocso case? | பொய்யான போக்சோ வழக்கிலிருந்து தப்பிப்பது எப்படி?

Pocso | How to escape a false Pocso case? | பொய்யான போக்சோ வழக்கிலிருந்து தப்பிப்பது எப்படி?

  • Points / குறிப்புகள்:
  • சங்கர் என்ற ஒரு ஆண் இருக்கிறான்.
  • ஒரு 15 வயது சிறுமி ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கிறாள்.
  • சம்பவத்தன்று மேற்படி சிறுமி சைக்கிளில் தன்னுடைய பள்ளிக்கு செல்கிறாள்.
  • அப்போது மேற்படி சங்கர், அந்த சிறுமியை வழிமறித்து, ” நீ ரொம்ப அழகாக இருகிறாய், எனவே, நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசை படுகிறேன்” என்கிறான்.
  • உடனே அந்த சிறுமி, சத்தம்போட்டு கத்தவே, மேற்படி சங்கர், அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து, “என்னை கல்யாணம் செய்துகொள்ள வில்லையானால், நான் உன்னை கொண்டுவிடுவேன்” என்கிறான்.
  • அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு நவீன் மற்றும் அவருடன் 5 நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள்.
  • அதைக்கண்டதும், மேற்படி சங்கர் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறான்.
  • அதைதொடர்ந்து, நவீன் மற்றும் நண்பர்கள் அந்த பெண்ணை பள்ளிவரை கொண்டு விட்டுவிடுகிறார்கள்.
  • நடந்த சம்பவத்தை அந்த சிறுமி, தன்னுடைய வகுப்பு வகுப்பு ஆசிரியையிடம் சொல்கிறாள். ஆசிரியை அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்ல அவர் அந்த பெண்ணில் பெரியப் பாவிடம் சொல்கிறார்.
  • உடனே பெரியப்பா, காவல் நிலையம் சென்று ஒரு புகாரை கொடுக்கிறார்.
  • அந்த புகாரின் அடிப்படியில், மேற்படி சங்கர் மீது IPC-341, IPC-506/2 பிரிவுகளிலும், மற்றும் Women harassment Act ன் படியும் ஒரு FIR போடுகிறார்கள்.
  • அதன் பிறகு, அந்த சம்பவத்தை புலன் விசாரணை செய்து, POSCO Act-7 யை சேர்த்து குற்றபத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள்.
  • அந்த வழக்கை விசாரித்த கிழமை நீதிமன்றம், மேற்படி சங்கருக்கு தண்டனை வழங்கி உத்தரவிடுகிறது.
  • அந்த தண்டனையை ரத்து செய்ய கோரி மேற்படி சங்கர், உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.
  • அந்த மேல்முறையீட்டில் மேற்படி சங்கர் வைத்த வாதம் என்னவென்றால்.
  • அந்த பெண் பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் போது அவழியாக வந்த நான், அந்த பெண்ணை பார்த்து ” என்னம்மா எப்படி இருகிறாய் என்றுதான் கேட்டேன்.
  • அதை கண்ட அங்கு வந்த நவீன் மற்றும் இதர ஐந்து நபர்களும், எங்க ஊர் பில்லைகிட்டே எப்படிடா நீ பேசலாம் என்று சொல்லி, என்னை கடுமையாக தாக்கினார்கள். அதனால் எனக்கு உடம்பில் காயங்கள் ஏற்பட்டது. நானும் உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்தேன்.
  • மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகலும் தெரிவித்தார்கள்.
  • போலீஸ் வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்கினார்கள். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு வழக்கும் பதிவு செய்தார்கள்.
  • இவற்றை தெரிந்துகொண்ட அந்த பெண் வீட்டார்கள் என்னுடைய புகாருக்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, அந்த பெண்ணை பயன்படுத்து, தவறாக என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
  • இந்த வழக்கை புலன் விசாரணை செய்த போலீஸ், நான் கொடுத்த புகாரை மறைத்துவிட்டனர்.
  • மேலும், நான் அந்த பெண்ணிடம் தவறாக நடந்த விஷயத்தை பற்றி அங்கு இருந்த நவீன் மற்றும் மற்றவர்களிடம் விசாக்கவில்லை.
  • அந்த பெண் பள்ளி ஆசிரியையிடம் சொல்லி, அவர் தலைமை ஆசிரியரிடம் சொல்லி, அவர் பெரியப்பாவிடம் சொல்லி வழக்கு போடப்பட்டுள்ளது, அனால், சாட்சிகளாக அந்த பள்ளி ஆசிரியையை தலை ஆசிரியரை, போலீஸ் விசாரிக்கவில்லை.
  • மேலும், அந்த பெண்ணை நீதித்துறை நடிவரிடம் அழைத்துசென்று 164 ன் கீழ் ஸ்டேட்மன்ட் எதுவும் வாங்கவில்லை.
  • சம்பவம் நடந்ததாக சொல்லபடுவது 22ந்தேதி அனால், FIR பதிவு செய்தது 23 ந்தேதி.
  • மேலும், என்னுடைய FIR பதிவான பிறகுதான் அந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, நான் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசு தரப்பு நான் குற்றம் செய்ததை நிருபிக்கவில்லை.
  • அதே சமயம், என்னுடைய FIR மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பு எனக்கு சொல்லவில்லை.
  • நான் கொடுத்த புகாரில் SC ST சட்டத்தின் கீழ் புகார் அளித்தேன், அதை உடைக்க வேண்டும் என்பதற்காக என்னை POSCO சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள்.
  • எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யவேண்டும். என்று மேற்படி சங்கர் தரப்பு கோரிக்கை வைக்கிறார்.
  • மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து விஷயங்களையும் விசாரித்து, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.

Views: 30 (இந்த பதிவு இன்னும் சரியாக திருத்தம் செய்யப்படவில்லை. எனவே, ஒலி வடிவில் கேட்பது சிரமம் ) தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் பற்றி தெரிந்து கொள்வோம் பத்திரம் எழுதும் போது சொத்தினை எழுதி கொடுப்பவர், தனக்கு

குற்றவாளி கொடுக்கும் வாக்குமூலம் அடிப்படையில் நேரடி சாட்சி இல்லாமல் கைது செய்வது சட்டப்படி குற்றம்!குற்றவாளி கொடுக்கும் வாக்குமூலம் அடிப்படையில் நேரடி சாட்சி இல்லாமல் கைது செய்வது சட்டப்படி குற்றம்!

Views: 28 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

இணைத்த 2 மின் இணைப்புகள் இனி தனித்தனி! மின்சார வாரியத்திற்கு எதிரான வழக்கில் நுகர்வோருக்கு வெற்றி!இணைத்த 2 மின் இணைப்புகள் இனி தனித்தனி! மின்சார வாரியத்திற்கு எதிரான வழக்கில் நுகர்வோருக்கு வெற்றி!

Views: 6 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.