GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் RTI | Private hospitals also liable. தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.

RTI | Private hospitals also liable. தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு..!!

தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு நோயாளி தனது சிகிச்சையைப் பற்றிய தகவல்களை பெற உரிமை உண்டு.

தனியார் மருத்துவமனைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவப் பதிவுகளை வழங்க வேண்டும்.

மத்திய தகவல் ஆணையம்
கோப்பு எண்.CIC / AD / A / 2013 /001681SA நாள் 24-07-2014.

Nisha Priya Bhatia Vs Institute of AB&BS, GNCTD

நோயாளியின் சொந்த மருத்துவப் பதிவேடு கொடுக்கப்பட வேண்டிய தகவல்கள் ஆகும். மருத்துவ குறிப்புகள் அடங்கிய பதிவேட்டை ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 21 ஆரோக்கியத்திற்கான உரிமையையும், ஷரத்து 19 (1) வாழ்வதற்கான உரிமையையும் பற்றி கூறுகிறது. தகவல் பெறும் உரிமையும் அடிப்படை உரிமையாகும்.

இந்த உரிமை அரசுத்துறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதில்லை. தனியார் அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனிப்பட்ட மருத்துவர்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும்.

பிரிவு 2 (f) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தகவல் வரையறையின் மூலம் நாடாளுமன்றத்தின் ஆணையின்படி தகவல் ஆணையம் இதை அமல்படுத்த முடியும்.

எனவே நோயாளி ஒருவர் தனது மருத்துவ குறிப்புகளை அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது:உயர் நீதிமன்றம்பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது:உயர் நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் No FIRs under

DTCP, CMDA அப்ரூவல் பற்றிய விளக்கம்.DTCP, CMDA அப்ரூவல் பற்றிய விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 நிலத்தில் லே-அவுட் Layout போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல் விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் Conversion அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் | Tamil Nadu State Election Commissionதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் | Tamil Nadu State Election Commission

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 38 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்Tamil Nadu State Election Commission தேர்தல்கள் நடத்துதல்1. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் :உள்ளாட்சி