Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.

  • குறிப்புகள்:
  • ஒரு வழக்கு தொடங்குவது என்பது ஒரு PLAINT வாதி மூலமாக தொடங்கப்படுகிறது.
  • யாரை நோக்கி வழக்கு தொடங்கபடுகிறதோ, அவருக்கு பெயர் DEFEDANT பிரதிவாதி யாகும்.
  • வாதியால் தாக்கல் செய்யப்படும் வழக்கு, நீதி மன்றத்தால் ஏற்றுகொள்ளபட்டால், அதற்கு நம்பர் வழங்கப்படும், அதே நேரத்தில் பிரதி வாதிக்கு NOTICE அறிவிப்பு அனுப்பப்படும்.
  • பிரதி வாதி அந்த அறிவிப்பை ஏற்று, நீதி மன்றத்தில் ஆஜராகாமலோ, அல்லது ஆஜர் ஆகி சரியான நேரத்திற்கு WRITTEN STATEMENT பதிலுரை அளிக்காவிட்டாலும் அந்த வழக்கு EXPARTE செய்துவிடுவார்கள்.
  • ஒரு வழக்கு EXPARTE செய்யப் பட்டால், அந்த வழக்கின் வாதிக்கு EPARTE EVIDENCE அதாவது தன வழக்கிற்கு தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும். அதை பார்த்து நீதுமன்ரம் தீர்ப்பு வழங்கும்.
  • பிரதிவாதி, நீதிமன்ற அறிவிப்பை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பதிலுரையை தாக்கல் செய்துவிட்டால். வழக்கிற்கு தேவையான DOCUMENTS ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
  • ஆவணகளை தாக்கல் செய்ய, காலதாமதம் ஆகுமானால், அதற்கா மனு ஒன்றை நீதி மன்றத்திற்கு அளித்து, அனுமதி பெறவேண்டும்.
  • வாதி மற்றும் பிரதிவாதி, தாக்கல் செய்த ஆவணகளை வைத்து அடுத்து ISSUES எழுவினக்கள் நீதி மன்றம் தயார் செய்யும்.
  • அதன் பின், TRIAL விசாரணை தொடங்கும் அதில் சாட்சிகள், மற்றம் வாதியின் பக்கம் விசாரிக்கப்படும்.அதில் குறுக்கு விசாரணை நடத்தலாம், அதேபோல பிரதிவாதியும் சாட்சிகளும் விசாரிக்கபடலாம்.
  • வாதிக்கு பிரதி வாதியையும், பிரதிவாதி வாதியையும் விசாரிக்க அதிகாரம் உண்டு.
  • இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு தீர்ப்பு வழங்கப்படும்.
AIARA

🔊 Listen to this குறிப்புகள்: ஒரு வழக்கு தொடங்குவது என்பது ஒரு PLAINT வாதி மூலமாக தொடங்கப்படுகிறது. யாரை நோக்கி வழக்கு தொடங்கபடுகிறதோ, அவருக்கு பெயர் DEFEDANT பிரதிவாதி யாகும். வாதியால் தாக்கல் செய்யப்படும் வழக்கு, நீதி மன்றத்தால் ஏற்றுகொள்ளபட்டால், அதற்கு நம்பர் வழங்கப்படும், அதே நேரத்தில் பிரதி வாதிக்கு NOTICE அறிவிப்பு அனுப்பப்படும். பிரதி வாதி அந்த அறிவிப்பை ஏற்று, நீதி மன்றத்தில் ஆஜராகாமலோ, அல்லது ஆஜர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *