GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஆம் முடியும்!

ராஜம்மாள் என்பவர் ஒரு விவசாயி. அவருக்கு சொந்தமாக பட்டா நிலம் உள்ளது, அந்த நிலத்தில் அவர் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறார், இந்நிலையில் சிலர் ராஜம்மாளின் பட்டா நிலத்திற்கு அருகிலுள்ள, பொதுப் பாதையான, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அதில் குப்பைகள் மற்றும் மணலை கொட்டி வைத்து ராஜம்மாள் விவசாய நிலத்துக்கு செல்ல தடை ஏற்படுத்தினர்.

இதனால் பட்டா நிலத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை, விவசாயமும் செய்ய முடியவில்லை, இதனால் பாதிக்கப்பட்ட ராஜம்மாள், மாவட்ட ஆட்சியரிடம் பொதுப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும், என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்தார்,
அந்த மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காததால், ராஜம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,
பொதுப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது, அது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாதை ஆக்கிரமிப்பு என்று மனு தாக்கல் செய்யப்பட்டால், உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது.

ராஜம்மாளின் மனு மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், விசாரணை நடத்த வேண்டும் என்று கலெக்டர் முடிவு செய்தால் ராஜம்மாள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அந்த விசாரணையை 10 நாட்களுக்குள் நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

CASE: W. P. NO – 34103/2016
02.01.2019.

ராஜம்மாள் Vs மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பலர், 2019-1-TLNJ-CIVIL-227.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

7 மணிக்கு மேல் no கடன் வசூலுக்கு தடை RBI அதிரடி.7 மணிக்கு மேல் no கடன் வசூலுக்கு தடை RBI அதிரடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 7 மணிக்கு மேல் no கடன் வசூல் Call! – RBI அதிரடிவங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு

Affidavit அபிடவிட் எனப்படும் உறுதிமொழி பற்றிய முழு விளக்கம்.Affidavit அபிடவிட் எனப்படும் உறுதிமொழி பற்றிய முழு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 128 அபிடவிட் என்றால் என்ன அபிடவிட் என்பதை உறுதிமொழி பத்திரம், உறுதிச்சான்று, சத்திய வாக்குமூலம், வாக்குமூலம், பிரமாணப்பத்திரம், ஆணைபத்திரம், சத்திய பிரமாண வாக்குமூலம்,

குற்றவாளி விடுதலை செய்யப்பட்டால் அரசு வழக்கறிஞர், காவல் விசாரணை அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்புகுற்றவாளி விடுதலை செய்யப்பட்டால் அரசு வழக்கறிஞர், காவல் விசாரணை அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 107 குற்றவாளி விடுதலை செய்யப்பட்டால் அரசு வழக்கறிஞர்,காவல் விசாரணை அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பு. CRL.Appeal No.1485/2008, Date: 07-01-2014 இதை