GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் நில உச்சவரம்பு. இந்தியாவில் மாநில வாரியாக ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம்

நில உச்சவரம்பு. இந்தியாவில் மாநில வாரியாக ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒரு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே ஒரு விளைநிலத்தை வாங்க முடியும். அதிகபட்சமாக ஒருவர் மகாராஷ்டிராவில் 54 ஏக்கர் நிலம் வரை வாங்க முடியும்.
கேரளா: இம்மாநிலத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963 இன் படி திருமணம் ஆகாத ஒரு நபர் 7.5 ஏக்கர் நிலம் வரையில் வைத்திருக்கலாம். 2 முதல் 3 பேர் உள்ள ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கர் வரை விவசாய நிலத்தை வாங்கலாம். 5 பேர் கொண்ட கூட்டு குடும்பமாக வாழும் ஒரு குடும்பத்தினர் 20 ஏக்கர் வரையில் விவசாய நிலத்தை வாங்க முடியும்.
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஒரு நபர் 54 ஏக்கர் வரையில் விவசாய நிலத்தை வாங்க முடியும். இங்கு ஆண்டுக்கு 25 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உடையவர்களே நிலத்தை வாங்க முடியும். மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல இங்குள்ள விவசாயிகள் மட்டுமே விளைநிலத்தை வாங்க முடியும்.
குஜராத்: குஜராத் மாநிலத்தை பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு விவசாயியும் இங்கு விவசாய நிலத்தினை வாங்க முடியும்.
பீகார்: பீகார் மாநில நில ஆவணங்களின்படி, ஒரு நபர் விவசாயம் செய்யக்கூடிய அல்லது விவசாயம் செய்ய இயலாத நிலம் உள்பட சுமார் 15 ஏக்கர் நிலம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
இமாச்சலப் பிரதேசம்: இந்த மாநிலத்தில் ஒரு நபர் அதிகபட்சம் 32 ஏக்கர் அல்லது 120 பிகாஸ் அளவுள்ள நிலம் வரை வாங்கலாம்.
மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் இங்குள்ள ஒரு தனி நபர் 24.5 ஏக்கர் வரை நிலம் வாங்கலாம்.
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒருவர் அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரை விளைநிலத்தை வாங்க முடியும்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் 1961இல் இயற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கர் நிலம் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐந்து ஏக்கர் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். ஒரு வீட்டின் மருமகளுக்கு சீதன சொத்தாக 10 ஏக்கர் வரை வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு குடும்பத்திற்கு 30 ஏக்கர் நிலம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலங்கள் சம்பந்தப்பட்ட சட்ட உதவிகளுக்கு தீர்வு காண அழையுங்கள் தேசிய சட்ட நீதி இயக்கம் 9751438854.6379434453

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தொலைந்து போன மூல பத்திரத்தின் Copy ஐ வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்தொலைந்து போன மூல பத்திரத்தின் Copy ஐ வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 தொலைந்து போன மூல பத்திரத்தின் Copy ஐ வைத்து பத்திர பதிவு செய்யலாம். காவல்துறையின் “Non Traceable Certificate ” தேவையில்லை.

அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 மனு தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் மூத்த வக்கீல்கள் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தக்கூடாது

2025 முதல் நிலம், வீட்டை பதிவு செய்ய,இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியம்.2025 முதல் நிலம், வீட்டை பதிவு செய்ய,இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 33 நிலம், வீட்டை பதிவு செய்கிறீர்களா?இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியம். இந்தியாவில் நிலம் அல்லது சொத்து வாங்குவதில் பதிவு என்பது