GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் நில உச்சவரம்பு. இந்தியாவில் மாநில வாரியாக ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம்

நில உச்சவரம்பு. இந்தியாவில் மாநில வாரியாக ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம்

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒரு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே ஒரு விளைநிலத்தை வாங்க முடியும். அதிகபட்சமாக ஒருவர் மகாராஷ்டிராவில் 54 ஏக்கர் நிலம் வரை வாங்க முடியும்.
கேரளா: இம்மாநிலத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963 இன் படி திருமணம் ஆகாத ஒரு நபர் 7.5 ஏக்கர் நிலம் வரையில் வைத்திருக்கலாம். 2 முதல் 3 பேர் உள்ள ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கர் வரை விவசாய நிலத்தை வாங்கலாம். 5 பேர் கொண்ட கூட்டு குடும்பமாக வாழும் ஒரு குடும்பத்தினர் 20 ஏக்கர் வரையில் விவசாய நிலத்தை வாங்க முடியும்.
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஒரு நபர் 54 ஏக்கர் வரையில் விவசாய நிலத்தை வாங்க முடியும். இங்கு ஆண்டுக்கு 25 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உடையவர்களே நிலத்தை வாங்க முடியும். மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல இங்குள்ள விவசாயிகள் மட்டுமே விளைநிலத்தை வாங்க முடியும்.
குஜராத்: குஜராத் மாநிலத்தை பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு விவசாயியும் இங்கு விவசாய நிலத்தினை வாங்க முடியும்.
பீகார்: பீகார் மாநில நில ஆவணங்களின்படி, ஒரு நபர் விவசாயம் செய்யக்கூடிய அல்லது விவசாயம் செய்ய இயலாத நிலம் உள்பட சுமார் 15 ஏக்கர் நிலம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
இமாச்சலப் பிரதேசம்: இந்த மாநிலத்தில் ஒரு நபர் அதிகபட்சம் 32 ஏக்கர் அல்லது 120 பிகாஸ் அளவுள்ள நிலம் வரை வாங்கலாம்.
மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் இங்குள்ள ஒரு தனி நபர் 24.5 ஏக்கர் வரை நிலம் வாங்கலாம்.
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒருவர் அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரை விளைநிலத்தை வாங்க முடியும்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் 1961இல் இயற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கர் நிலம் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐந்து ஏக்கர் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். ஒரு வீட்டின் மருமகளுக்கு சீதன சொத்தாக 10 ஏக்கர் வரை வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு குடும்பத்திற்கு 30 ஏக்கர் நிலம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலங்கள் சம்பந்தப்பட்ட சட்ட உதவிகளுக்கு தீர்வு காண அழையுங்கள் தேசிய சட்ட நீதி இயக்கம் 9751438854.6379434453

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

புதுச்சேரியில் ஏழைமக்களுக்கு அரசால் வழங்கப்படும் LGR (Land Grant Rules) Patta எனப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாவில் அரசு விடுத்துள்ள நிபந்தனைகள்.புதுச்சேரியில் ஏழைமக்களுக்கு அரசால் வழங்கப்படும் LGR (Land Grant Rules) Patta எனப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாவில் அரசு விடுத்துள்ள நிபந்தனைகள்.

Views: 9 நிபந்தனைகள் இதற்கு சான்றாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களின் ஆணைப்படியும் உத்தரவின் படியும் எவருக்காகவும் அவர் சார்பிலும் செயலாற்றும் துணை கலெக்டர் திரு —————- அவர்களும் ஒப்படை ஒப்படை பெற்றவராகிய திரு / திருமதி ————- அவர்களும், முதலில்

ஜாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைகழித்ததால் மனுதாரக்கு ரூ 50000 வழங்க கோட்டாட்சியாருக்கு உத்தரவு.ஜாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைகழித்ததால் மனுதாரக்கு ரூ 50000 வழங்க கோட்டாட்சியாருக்கு உத்தரவு.

Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

Views: 41 சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்: கிராம சபை குறை தெரிவிக்க புகார் எண் வெளியீடு. அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : –