GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”

High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”

Courtesy: Puthiyathalaimurai

Courtesy : The Proletariat Pleaders

தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் எனக் கூறுகிறது. தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் என்று, இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி அதிக வட்டி வசூலிப்பவர்களுக்கு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கவும், 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், கந்துவட்டி தடுப்பு சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த சட்டத்தின் கீழ் அதீத வட்டி மற்றும் அதற்கு கூடுதல் அபராதம் வசூலிக்கும் வட்டி காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில் தொடர்புடையவர் 15 நாட்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். பணம் கொடுத்த நபர் கூடுதல் வட்டி வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். கடன் பெற்றவர் செலுத்த வேண்டிய தொகை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும் என்கிறது தமிழக அரசின் சட்டம். வட்டி வசூலிப்பவர் கடன் பெற்றவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்தி இருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக் கொடுக்கும்.

ஆனால் அவையெல்லாம் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது ஒரு பெரிய சுரண்டல் தொழிலாக ஒரு இருட்டு தொழிலாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் சட்டத்தின் பிடியில் வருவத்தில்லை, கடந்த காலங்களில் கந்து வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் போட காரசாரமாக விவாதங்கள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கூட இது தொடர்பாக பல்வேறு ஆணைகளை ஆட்சித் தலைவர்களுக்கும் காவல்துறைக்கும் பிறப்பித்தார். ஆனாலும் அதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

கந்துவட்டி பிரச்சனையால் யாராவது தற்கொலை செய்ய நேர்ந்தால், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் கடுமையானது என்பதால் சாமானியர்கள் இதுபோன்ற கந்து வட்டிக்காரர்களை நாடுகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.

கந்துவட்டி குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தி உள்ளது மேலும் கந்து வட்டி வசூலித்து அவர்களை கண்காணிக்க மாவட்டம், தாலுகா வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, இனியாவது எந்த உயிரும் பலியாகாமல் அரசும் காவல் துறையினரும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியத்தை நெல்லை சம்பவம் உணர்த்தி இருக்கிறது இருக்கிறது

தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003

பிரிவு-1 – “காரண விளக்கவுரை”

தின வட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் போன்ற வரண்முறை இல்லா வட்டி, எவரோனும் நபரால் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் அதற்கு இரையாகி பொதுமக்கள் கடுந்துயர்படுவதை நீக்கும் பொருட்டு, அவ்வாறான நபர் அவ்வாறான வரம்பிகந்த வட்டிக்கு  பணம் கொடுத்தலை தடை செய்திடவும், அதற்கு கடும் தண்டணைக்கு வகை செய்திடவும், அரசானது இந்நோக்கதிற்கிணங்க புது சட்டம் இயற்றிட முடிவு செய்கிறது.

பிரிவு-2 – பொருள் வரையறைகள்.

(1) “தினவட்டி” எனில் நாள் தோறுமான வட்டி கணக்கிடப்படுகையில், 1957ஆம் ஆண்டு த.நா.பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதலானாது எனப் பொருள்படும்.

(2)  “கடனாளி” என்பவர் வரம்பிகந்த வட்டிக்கு கடன் பெறும் நபர் எனப் பொருள் படும்.

(3)  “வரம்பிகந்த வட்டி” என்பதில் தினவட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் உள்ளடங்கியதாக பொருள்படும்.

(4) “மணிநேர வட்டி”  எனில் மணிக்கணக்கில் வட்டி, கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.

(5)    “கந்து வட்டி”  எனில் வட்டியானது கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.
(6)    “கடன்” எனில் தினவட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி அல்லது தண்டலுக்கு கொடுக்கப்படும் முன்பணத் தொகை எனப் பொருள்படும்.

(7)    “மீட்டர் வட்டி” எனில் வட்டியானது கணக்கிடப்படுகையில், கடன் தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்கப்படாத ஒவ்வொரு நாளும் வட்டியானது கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.

(8)    “தண்டல்” என்பது கடன் தொகை பகுதியுடன் வட்டியும் தினம் வசூலிக்கப்பட்டு, வட்டியானது 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.

(9)    இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனால் பொருள் வரையறை செய்யப்படாத சொற்கள் மற்றும் சொற்றொடர்கள், 1957 ஆம் ஆண்டு த.நா. பணம் கொடுப்போர் சட்டத்தில் அதற்கென உள்ள பொருளையே கொண்டிருக்கும்.

(பிரிவு.3):-வரம்பிகந்த வட்டி விதிப்பதை தடை செய்தல்.


எவரேனும் அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு வரம்பிகந்த வட்டி விதிக்கலாகாது. </p>

(பிரிவு.4):- தண்டனை 

1957 –ஆம் ஆண்டு த.நா.கடன் கொடுப்போர் சட்டத்தில் கண்டுள்ளது எது எவ்வாறு இருப்பினும், எவரொருவர் பிரிவு 3-ன் காப்புரைகளை மீறுவாராயின் அல்லது கடன் தொகையினை வசூல் செய்திட எவரேனும் கடனாளியை தொந்திரவு அல்லது தொந்திரவு செய்திட உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரையான காலத்திற்கு நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையுடன் மற்றும் ரூ.30,000 வரை நீடிக்கத்தக்க அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவர்.

(பிரிவு.5):- நீதிமன்றத்தில் பணம் வைப்பீடு செய்தல் மனுதாக்கல் மற்றும்நடைமுறை:- 
Deposit of Money and presentation of Petition to the Court and the Procedure thereof

(1)    எவரோனும் நபரிடமிருந்து கடனாளி தான் பெற்ற கடன் தொகையினைப் பொறுத்து, 1957 ஆம் ஆண்டு த.நா. பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ல் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டித் தொகையுடன் பணத்தினை, ஆள்வரை கொண்ட நீதிமன்றத்தில், முழு அல்லது பகுதி கடன் மற்றும் அதற்கான வட்டி நேர்விற்கேற்ப, பதிவு செய்யும் வகையிலான மனுவுடன், வைப்பீடு செய்திடலாம்.

(2)    நீதிமன்றமானது உட்பிரிவு (1)ன் கீழ் மனு வரப்பெற்றவுடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு பிரதியை அனுப்பி, நீதிமன்றத்தால் வழங்கப்படக்கூடியவாறான 15 நாட்களுக்குள் வழக்கிற்கான தனது கூற்றினை அளிக்குமாறு நெறியுறுத்திடும். நீதிமன்றமானது, உரிய விசாரணைக்குப் பின்னர் மற்றும் தரப்பினர்களின் கூற்றுகளை பரிசீலனை செய்த பின்னர், கடன் தொகை முழு அல்லது பகுதி மற்றும் வட்டி நேர்விற்கேற்ப உளநிறைவு பதிவுடன் ஆணைகளை பிறப்பிக்கும்.

(பிரிவு.6) உடைமையினை மீட்டல்: -
Restoration of Possession of Property

நீதிமன்றமானது, கடனாளி மனு தாக்கல் செய்ததின் பேரில், கடன் தொகை அல்லது அதற்கான வட்டிக்கு எவரோனும் நபரால் வலுவந்தமாக எடுத்துக்கொள்ள அசையும் அல்லது அசையா சொத்தின் உடைமையினை மீட்பதற்கு உத்திரவு பிறப்பிக்கலாம்.

தன்னிச்சையாக வெளிப்படுத்துதல் :
Voluntary Disclosure

இந்த அவசரச் சட்டம் த.நா. அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு திங்களுக்குள், வரம்பிகந்த வட்டி விதிக்கும் நபர் எவரும், தான் கொடுத்த கடன் தொகைக்கு, 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டம் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயியக்கப்பட்ட வட்டியினை விதிக்க உள்ள தமது எண்ணத்தினை, நீதி மன்றத்தின் முன்னான மனுவில் வெளிப்படுத்தினால் அவ்வாறான வெளிப்படுத்தலின் பேரில் அவ்வாறான கடன் தொகைக்கு அரசினால் 1957-ஆம் ஆண்டு நிர்ணயக்கப்படும் மற்றும் அவ்வாறான கடன் பொறுத்து இந்த அவசரச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு குற்றவழக்கு தொடரப்படாது.

வட்டியினை சரிகட்டல்: - (பிரிவு.8)

கடன் தொகையினை வட்டியுடன் தீர்வு செய்திட வேண்டி கடனாளியால் தாக்கல் செய்யப்படும் மனுவின் பேரில், த.நா. பணம் கடன் கொடுப்போர் சட்டம் பிரிவு 7ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டிக்கு மேல் கொடுக்கப்பட்ட தொகையினை, கடன் தொகைக்கு சரிகட்ட உத்திரவு பிறப்பிக்கலாம்.

தற்கொலைக்கு உடந்தை: - (பிரிவு.9)
Abetment of suicide

கடளாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் தற்கொலை செய்து கொள்கிறவிடத்து மற்றும் அவ்வாறான தற்கொலைக்கு உடன் முன்னர் கடனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரோனும், யாதொரு நபரால் தொந்திரவு செய்யப்பட்டிருப்பின், மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, கடன் கொடுத்த நபர், அவ்வாறான தற்கொலைக்கு உடந்தையாக கருதப்படுவார்.
விளக்கம்: இப்பிரிவின் நோக்கத்திணங்க “குடும்ப உறுப்பினர்” எனில், வாழ்கைத்துணை, மணமாகாத மகள் அல்லது மணமாகாத மகன் எனப் பொருள்படும்.

அவசரச் சட்டம் பிற சட்டங்களை குறைவுறச் செய்திடாது: - (பிரிவு.11)
Act not to be in derogation to other laws

இந்த சட்டத்தின் கீழான குற்றங்களைப் பொருத்து, 1957 ஆம் ஆண்டு த.நா. கடன் கொடுப்போர் சட்டம் பிரிவு 12-ன் காப்புறைகள் பொருந்தாது. இச்சட்டத்தின் காப்புரைகள் தற்போது செல்லாற்றலிலுள்ள வேறு ஏதேனும் சட்டத்தின் காப்புரைகளுக்கு கூடுதலாக இருக்குமேயன்றி, குறைவுறச் செய்திடாது.

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டத்தின் காப்புரைகள் பொருந்துகை: - (பிரிவு.12)

இச்சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டத்தின் காப்புரைகள் பணம் கொடுப்போர்க்கு, வேண்டிய மாறுதல்களுடன், இந்த சட்டம் பிரிவு 3-ல் குறிப்பிடப்பெற்ற நபருக்குப் பொருந்துவனவாகும்.<br>
விளக்கம்: நபர் ஒருவரின் செய்கை இந்த சட்டத்தின் கீழ் 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு. பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழும் குற்றமாக அமைகிறவிடத்து, இந்த சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடரப்படும்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரிநீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரி

Views: 220 சட்டம் தெரியாத ஒரு பாமரனை எதிர் வழக்கறிஞரின் தவறான ஆலோசனை நீதிமன்றத்தின் தவறான வழக்கு ஏற்பு ஆகியவற்றை குறித்து எங்கள் அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர விரும்புகிறேன் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு நபர் அவரது

சார்பதிவகத்தில் தடைமனு எப்படி வழங்க வேண்டும்சார்பதிவகத்தில் தடைமனு எப்படி வழங்க வேண்டும்

Views: 30 சார்பதிவகத்தில் தடைமனு எப்படி வழங்க வேண்டும்* 1) உங்களுக்கு உரிமை இருக்கிற அல்லது உரிமை பட்டம் இருக்கிற அல்லது உரிமையில் ஒரு கூறு இருக்கிற அல்லது பங்கு இருக்கிற ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது

மதம் மாறினாலும் தன்னுடைய பட்டியலின அரசு சலுகைகளை மறுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.மதம் மாறினாலும் தன்னுடைய பட்டியலின அரசு சலுகைகளை மறுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Views: 27 1) பட்டியல் இன சாதியை சார்ந்த ஒருவர் தனது வீட்டில் இயேசுநாதர் படம், பைபிள் வசனங்கள் வைத்திருப்பதாலோ அல்லது அவர் ஞாயிறு தோறும் சர்ச்சிற்கு செல்வதாலோ அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக சொல்ல முடியாது. கடவுள்களை வணங்குவதும் பின்பற்றுவதும்