வழக்கு விசாரணைக்காக ஆஜரான இளம் வழக்கறிஞரை 24 மணி நேர காவலில் அனுப்ப உத்தரவிட்ட ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நடவடிக்கை கோரி இந்திய பார் கவுன்சில் கடிதம்
Bar Council of India (BCI) 06.05.2026 இன்று இந்திய தலைமை நீதிபதி Surya Kant அவர்களிடம் அவசர தலையீடு கோரி முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
Andhra Pradesh High Court-ல் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி Tarlada Rajasekhar Rao, இளம் வழக்கறிஞர் ஒருவரை 24 மணி நேரம் காவலில் எடுக்குமாறு உத்தரவிட்டதாக வெளியாகியுள்ள வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக BAR COUNCIL OF INDIA தலைவர் Manan Kumar Mishra மே 6 தேதி எழுதிய கடிதத்தில், “இத்தகைய சம்பவங்கள் இளம் வழக்கறிஞர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகின்றன. நீதிமன்றத்தின் கண்ணியம், ஒரு வழக்கறிஞரை திறந்த நீதிமன்றத்தில் கையேந்தி மன்னிப்பு கேட்க வைத்து பின்னரும் காவலில் அனுப்புவதால் உயராது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மே 4 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, வெளிநாட்டு பயணத் தடையாணை (Look Out Circular) மற்றும் பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு இளம் வழக்கறிஞரிடம் நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்ததுடன், அவர் “மிகப் பெரிய சீனியர் வழக்கறிஞர் என்று நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறிய அந்த இளம் வழக்கறிஞர் கைகூப்பி “கருணை காட்டுங்கள்” என மன்றாடியதும் பதிவாகியுள்ளது. அதற்குப் பிறகும் காவலில் எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஆந்திர உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் தலையீட்டின் மூலம் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் BAR COUNCIL OF INDIA தனது கடிதத்தில், “அந்த இளம் வழக்கறிஞரின் நடத்தையில் எங்களுக்கு எந்த தவறும் தெரியவில்லை” எனத் தெளிவாக தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு, நீதிமன்ற உத்தரவு மற்றும் முழு சூழ்நிலையையும் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் நிறுவனர் ரீதியான கவனம் செலுத்த வேண்டும் என்றும் BAR COUNCIL OF INDIA கோரியுள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட நீதிபதியிடமிருந்து தற்காலிகமாக நீதித்துறைப் பணிகளை வாபஸ் பெறுதல், இடமாற்றம் செய்தல், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் Bar–Bench உறவுகள் குறித்த சிறப்பு பயிற்சி அளித்தல் போன்ற நிர்வாக நடவடிக்கைகளையும் பரிசீலிக்குமாறு BAR COUNCIL OF INDIA வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு இளம் வழக்கறிஞருக்காக குரல் தந்த ஆந்திர பிரதேச வழக்கறிஞர் சங்கம் மற்றும் BAR COUNCIL OF INDIA நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.
Details in Facebook: https://www.facebook.com/share/r/1P2Yb41PcM/
