வழக்குகள் ஈபைலிங் கட்டாயம் உயர் நீதிமன்ற அறிவிப்பு
e-filing தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற IT &Statistics பதிவாளரின் கடிதம் திருத்தப்பட்ட தமிழாக்கம் பின்வருமாறு :
அனுப்புநர்:
எஸ். கணபதிசாமி, B.A., B.L.,
பதிவாளர் (IT-cum-Statistics),
உயர்நீதிமன்றம், சென்னை – 104
பெறுநர்:
- சென்னை நகர சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி
- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் / மாவட்ட நீதிபதிகள்
- முதன்மை நீதிபதி, புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம்
மதிப்பிற்குரியவர்களுக்கு,
பொருள்: e-Courts Project – District Judiciaryயில் அனைத்து வழக்குகளுக்கும் e-Filing கட்டாயம் – திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியீடு – மாவட்ட நீதித்துறையில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குதல் குறித்து.
உயர்நீதிமன்றம் அறிவிப்பு எண் 265/2025 (24.09.2025) மூலம் அனைத்து வகை வழக்குகள், மனுக்கள், ப்ளீடிங்ஸ் மற்றும் ஆவணங்களுக்கும் e-Filing கட்டாயமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் திருத்த அறிவிப்பு எண் 327/2025 (10.12.2025) வெளியிட்டுள்ளது. அதன் படி:
- அனைத்து புதிய வழக்குகளும் e-Filing portal மூலம் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- தீர்ப்பு வழங்கப்பட்ட (disposed) வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் / petitions கைமுறையில் (physical mode) தாக்கல் செய்யலாம்.
- ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் மனுக்கள் / petitions ‘Hybrid mode’ (physical + e-mode) இரண்டு முறையிலும் ஏற்கப்படும்.
- Family Court மணமுறிவு / matrimonial cases litigant (Party-in-Person) தாமே login உருவாக்கி e-File செய்ய வேண்டும்; பின்னர் Advocate நீதிமன்ற அனுமதியுடன் இணைந்து தொடரலாம்.
- Staff concerned வேலை நாட்களில் தினசரி SR Number வழங்க வேண்டும்; e-Filed வழக்குகளின் Scrutiny 3 working days இல் முடிக்கப்பட வேண்டும்.
மாவட்ட நீதிபதிகள் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்:
- e-Filed வழக்குகளுக்கு Filing No./SR No. தினசரி வழங்கப்பட வேண்டும்; எந்த pendencyயும் இருக்கக் கூடாது. Scrutiny Filing number கொடுத்த பிறகே செய்ய வேண்டும்.
- Advocates data / Certificates / EC / Sale Deed / Bank Statement போன்ற Digital வடிவில் இருக்கும் documents print எடுத்து மறுபடியும் scan செய்யாது நேரடியாக upload செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் e-Seva Kendra வசதி பயன்படுத்தி ஆவணங்களை digitize செய்ய அறிவுரை வழங்க வேண்டும்.
- Signature ஏற்கனவே உள்ள ஆவணங்களுக்கு OTP பெறுவதை தவிர்த்து, Digital Signature / e-Signature பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
- Scrutinizing Officers e-Filed வழக்குகளின் Scrutinyயை 3 working days உள்ளே முழுமையாக செய்ய வேண்டும்; piece-meal return தவிர்க்க வேண்டும்.
- Scrutiny நேரத்தில் e-Filed வழக்குகளுக்கு physical copies பெறக்கூடாது; hearing/trial போது தேவையானால் மட்டும் பெறலாம்.
- Pending e-Filed cases இல் Bench Clerks உடனடியாக e-Filed documents verify செய்ய வேண்டும்.
- Manual filing செய்யப்பட்ட pending cases இல் மனுக்கள் Hybrid modeஇல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்; e-modeல் வந்த ஆவணங்களுக்கு physical copy insist செய்யக்கூடாது.
- Advocate entries சரியாகப் பதிவேற்றப்பட்டு, e-Filed documents எதிர்கட்சிக்கும் portal மூலம் பிரதிபலிக்க வேண்டும்.
- Documents அனைத்தும் தனித்தனியாக (petition, affidavit, sale deed etc.) upload செய்ய வேண்டும்; single file ஆக upload செய்யக் கூடாது.
- Advocates மற்றும் Staffக்கு e-Filing தொடர்பான periodical training வழங்க வேண்டும்.
மேலதிகமாக, மேற்கண்ட அனைத்து அறிவுறுத்தல்களும் மாவட்ட நீதித்துறையிலுள்ள Judicial Officers மற்றும் Technical team பின்பற்றுவதற்கான தேவையான உத்தரவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எஸ். கணபதிசாமி, B.A., B.L.,
பதிவாளர் (IT-cum-Statistics),
உயர்நீதிமன்றம், சென்னை – 104.
