GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தில் உள்ள சபரி நகர் மனை பிரிவுகளுக்காக சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், பொதுமக்களின் வசதிக்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று வட்டார வளர்ச்சி அதிகாரி கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாண (ஒழுங்குமுறை)சட்டம், 1997தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாண (ஒழுங்குமுறை)சட்டம், 1997

Views: 15 #தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாண (ஒழுங்குமுறை) சட்டம், 1997 #நோக்கங்களும்_காரணங்களும்தமிழகத்தில் சமீப காலத்தில் காளான் தோன்றுவது போன்று பல மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம், தனி மருத்துவமனை, மருத்துவ தங்குமனைகள் தோன்றியுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புகளாகவும், ஆபத்தளிக்கும் சூழ்நிலையிலும் நடத்தப்படுகின்றன.

தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் என்ன?தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் என்ன?

Views: 86 🙏தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள்…. மருத்துவர்களின் அலட்சியத்தால் (Medical Negligence) ஒரு நோயாளி உயிரிழந்தாலோ, சுகாதாரப் பிரச்சினைகளை சந்தித்தாலோ, அவர்களுக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். 2023 டிசம்பர் 25 முதல் IPC

பொதுநல வழக்கு என்றால் என்ன? எப்படி எங்கே தாக்கல் செய்வது?பொதுநல வழக்கு என்றால் என்ன? எப்படி எங்கே தாக்கல் செய்வது?

Views: 46 பொதுநல வழக்கு :- ஒரு பார்வை பொதுவாக எந்த வழக்கையும் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தாக்கல் செய்ய முடியும் . இதனை சட்டத்தில் Locus standi என்று கூறுவார்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வழக்கு பதிவு செய்தால் இதனை