GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்டு கருத்து

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரத்தில் தனிநபர்கள் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் உரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. இதற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடு செய்கின்றனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினோம். இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே தனிநபர்களின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இதுபோன்ற மனுக்களை காலவரையின்றி நிலுவையில் வைப்பதற்குப் பதிலாக, விரைவாக அந்த மனுவை விசாரித்து ஏதாவது ஒரு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய கடமை மாவட்ட கலெக்டருக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற மனுதாரர்களின் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்காதது கடமையை மீறுவதாகும்.

எனவே இந்த கோர்ட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மனுதாரரின் மனுவை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலிக்க உத்தரவிட முடிவு செய்கிறது.அதன்படி மனுதாரர் மனுவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பரிசீலித்து அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து முறையாக விசாரித்து 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Courtesy of:
தினத்தந்தி
12April’25

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

1 thought on “கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

#legal #tamillawchannel | Advocate George Belegin | Akashavani, Nagercoil Live | Question & Answer#legal #tamillawchannel | Advocate George Belegin | Akashavani, Nagercoil Live | Question & Answer

Views: 0 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

பொய் வழக்கில் விடுதலையாகிவிட்டால் அது நீதி கிடைத்துவிட்டது என்றாகிவிடுமா?பொய் வழக்கில் விடுதலையாகிவிட்டால் அது நீதி கிடைத்துவிட்டது என்றாகிவிடுமா?

Views: 5 தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்று நீதிபதி கிருஷ்ணய்யர் கூறிய கருத்துக்கள் குறித்தும் இந்திய நீதிமன்றங்களில் பொதுமக்களுக்கு தாமதமாக கிடைக்கும் நீதியைப் பற்றி கொஞ்சம் அலசு வோமா? பெரும்பாலான பொதுமக்கள் சட்டம் அறியாதவர்களாக இருந்து வருகிறார்கள் இவர்கள்

தாழ்த்தப்பட்ட சமூகம் மாற்று மதத்திற்கு மாறிய பிறகு SC ST வழக்கு பயன்படுத்த முடியாது? உயர்நீதிமன்றம்!தாழ்த்தப்பட்ட சமூகம் மாற்று மதத்திற்கு மாறிய பிறகு SC ST வழக்கு பயன்படுத்த முடியாது? உயர்நீதிமன்றம்!

Views: 15 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.