GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அடமானக் கடன்கள் சட்டம்

அடமானக் கடன்கள் சட்டம்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

அடமானக் கடன்கள் சட்டம்


சொத்துக்களை அடமானமாகக் கொடுத்து கடன் பெறுவது அடமானக் கடன்;

பணம் கொடுப்பவரிடமே சொத்தை ஒப்படைத்து விடுவது; பணம் கொடுத்தவர் சொத்தை அனுபவித்து வருவார்;

கடன் வாங்கியவர் எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாரோ அன்று அவர் சொத்தை திரும்ப பெற முடியும்; அதுவரை கடன் கொடுத்தவரே சொத்தின் சொந்தக்காரர் போல சொத்தை அனுபவிப்பார்;ஒருவேளை, கடன் வாங்கியவர், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால், அவ்வளவுதான்! கடன் கொடுத்தவருக்கே சொத்து சொந்தமாகிவிடும்! கடன் வாங்கியவர் சொத்தை இழந்துவிட வேண்டியதுதான்! இப்படித்தான் பழங்காலத்தில் கடன் வாங்கி, சொத்தை அடமானம் வைத்திருக்கிறார்கள்; அந்த வகை அடமானத்தை “மார்ட்கேஜ்” Mortgageஎன்பர்; mort மார்ட் என்றால் இறந்த என்று பொருள்; gage கேஜ் என்றால் பிணை என்று பொருள்;

மார்ட்கேஜ் என்பது பிரென்ச் வார்த்தை;இதைத்தான் இங்கிலாந்து சட்டம் Morguam vadium (or Dead Pledge) என்று சொல்கிறது;அப்படி அடமானம் வைக்காமல், சொத்தை ஒப்படைத்து அதில் வரும் வருமானங்களை மட்டும், கடன் கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டு வந்து, ஒரு காலக்கட்டத்தில் சொத்தை திரும்ப ஒப்படைப்பது என்பது ஒரு வகை அடமானம்; இதில் சொத்து பறிபோகாது;இதை இங்கிலாந்து சட்டம் Vivium Vadiam (or Living Pledge) என்கிறது;

இப்படித்தான் பழங்காலங்களில் அடமானங்கள் இருந்திருக்கின்றன;அடமானக் கடன் வாங்குவது என்பது கிட்டத்தட்ட சொத்தை விற்பதற்குச் சமம்! கடனை திரும்பிக் கொடுத்தால் மட்டுமே சொத்து திரும்பக் கிடைக்கும்! இல்லையென்றால், கடன் கொடுத்தவரின் சொத்தாகிவிடும்!

இந்தியாவில் இப்படிப்பட்ட அடமான முறைதான் வழக்கத்தில் இருந்திருக்கிறது; கடன் கொடுத்தவருக்கு சொத்தை கிரயமாகக் கொடுத்து விடுவது;கடன் வாங்கியவர், பணத்தை திரும்பிக் கொடுக்கும்போது, கடன் கொடுத்தவர்,சொத்தை மறு-கிரயம் எழுதிக் கொடுப்பார்; இதை சென்னை மாகாணத்தில், “அவதி விக்கிரயம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்; இது ரோமன் சட்டத்தில் உள்ள பிடுசியா Fiducia அடமான முறை ஆகும்; (Fiducia = கடன் வாங்குபவர் அவரின் சொத்தை, முழு உரிமையுடன் கிரயமாக, கடன் கொடுத்தவருக்கு எழுதிக் கொடுத்துவிடுவது);

மற்றொரு அடமான கடன் முறைப்படி — சொத்தின் உரிமையாளர், கடன் வாங்கும்போது, அவரின் சொத்தை, கடன் கொடுத்தவருக்கே கொடுத்து விடுவார்;ஆனால் கடன் கொடுத்தவர், அந்த சொத்தை வட்டிக்காக, அல்லது அசலுக்காக, அந்தச் சொத்தில் வரும் வருமானங்களை அனுபவித்துக் கொள்வார்; ஒரு குறிப்பிட்ட கால முடிவில்,அந்த சொத்தை, கடன் வாங்கியவருக்கே (அந்த சொத்தின் உரிமையாளருக்கே) திரும்ப ஒப்படைத்து விடுவார்; இதில் அந்த அடமானச் சொத்து திரும்ப கிடைத்து விடும்; சொத்து பறிபோகாது;இந்த முறைக்கு ரோமன் சட்டத்தில் பிக்னஸ் அடமானம் Pignus என்று பெயர்;இங்கிலாந்தில் இதை யூசுபிரக்சுரி அடமானம் Usufructuary mortgage என்று பெயர்; Use the Fruits. பலனை அனுபவித்துக் கொள் என்பதாகப் பொருள்;

இந்த வகை அடமானமுறை தென் இந்தியாவிலும் இருந்திருக்கிறது;இதையே “போக்கிய அடமானம்” அல்லது “சுவாதீன அடமானம்” என்று சொல்வர்;மலபார் பகுதியில் இதையே “கனம்” அல்லது “ஒத்தி” என்று சொல்வர்;

முகமதிய சட்டத்திலும், அவதி விக்கிரயம் என்ற வகை அடமானம் போன்றே அடமான முறை இருந்திருக்கிறது;அதற்குப் பெயர் “பை-பில்-வாபா” “Bye-bil-wafa” என்று பெயர்; இதில் வட்டிப் பிரச்சனை இல்லை; குரான் கட்டளைப்படி முகதியர் எவரும் வட்டி வசூல் செய்யக் கூடாது; எனவே கடன் வாங்கியவர் சொத்தை, கடன் கொடுத்தவருக்கு கிரயமாகவே கொடுத்துவிட வேண்டும்;அந்த தொகையுடன் மேலும் ஒரு தொகை சேர்த்து திரும்பக் கொடுக்கும் காலத்தில்,மறு கிரயம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்;

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காவல் அதிகாரிப் போல் ஆள் மாறாட்டம் செய்தால் என்ன தண்டனை ?காவல் அதிகாரிப் போல் ஆள் மாறாட்டம் செய்தால் என்ன தண்டனை ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 https://youtube.com/shorts/s5w32XKy9ng?feature=share ஒரு பொது ஊழியராகப் பாவனை செய்தல்.-எந்தவொரு குறிப்பிட்ட பதவியையும் பொது ஊழியராகப் பார்ப்பதாகக் காட்டிக்கொள்பவர், அவர் அத்தகைய பதவியை வகிக்கவில்லை

மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 106 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_ மாநில மனித உரிமை ஆணையம்,

முக்கிய அம்சங்கள்: இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகிய 3 குற்றச் சட்டங்களில் திருத்தம்.முக்கிய அம்சங்கள்: இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகிய 3 குற்றச் சட்டங்களில் திருத்தம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 முக்கிய அம்சங்கள்: இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகிய 3

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)