நீதி மன்றத்தில், நம் வழக்கை நாமே வாதாடுவதற்கு நடைமுறைகள் என்ன?
நம் வழக்கில் வாதாடும் உரிமை முதலில், நமக்குத்தான் உண்டு. நாம் விரும்பினால் மட்டுமே, நமக்கு விருப்பப்பட்ட வக்கீலை நீதிமன்றத்தில் ஆஜாராக சொல்லி கேட்கலாம். மாறாக, எவர் ஒருவரோ, அல்லது வக்கீலோ, அல்லது ஒரு நீதிபதியோ கூட வக்கீல் வைத்துதான் வாதாட வேண்டும் என்று சொல்ல முடியாது.
நாமே வாதாட விருப்பப்பட்டால், நமக்கு அழைப்பாணை வந்த பிறகு நீதிமன்றம் செல்லும்போது, “உங்கள் வழக்கிற்கு வக்கீல் வசிக்கிறீர்களா?” என நீதிபதி கேட்பார் . அப்போது, என் வழக்கிற்கு நானே வாதாடி கொள்கிறேன் என்று வாயால் சொன்னாலே போதுமானது.