ஒரு வக்கீல் நம்முடைய வழக்கிலிருந்து விலகிக்கொள்வதற்கு, ஆட்சேபனை தெரிவிக்க முடியுமா??
ஒரு வழக்கில் ஆஜராகி வாதாடும் முதல் உரிமை வழக்காளிக்குத்தான் உண்டு. நம் வழக்கில் நாமே வாதாட எந்த நீதிமன்றமும் மறுக்க முடியாது. பிரத்தியேக எந்த ஒரு அனுமதியும் தேவைய கிடையாது. அந்த வழக்காளிக்கு நேரம் போதாமை, அல்லது உடல் நலம் குறைவு, அல்லது நீதிமன்றத்தில் வாதாடுவதில் கூச்சம், தயக்கம் போன்றவை இருந்தால் மட்டுமே, தனக்காக ஒரு வக்கீலை ஆஜராகி வாதாட கேட்கலாம்.
அதே சமயம், நமக்கு, நாம் அமர்த்திய வக்கீலை எந்த நேரம் வேண்டும் என்றாலும் விளக்கிக்கொள்வதோ, அல்லது வேறொரு வக்கீலை மீண்டும் அமர்த்துவதோ நமது உரிமையாகும். வழக்கிலிருந்து விலக மாட்டேன் என்றோ, வழக்கு கட்டை தர மாட்டேன் என்றோ எந்த ஒரு வக்கீலும் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது.