
PCA Police Complaint Authority / காவல்துறை புகார் அதிகாரி
-
by admin.service-public.in
- 64
ஒரு காவல் ஊழியர் தவறு செய்தால், அவருடைய மேல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்பது முறை. அதே சமயம், ஒரு காவல் அதிகாரி தவறு செய்யும் பட்சத்தில், அவரைப் பற்றிய புகாரை அவருக்கு மேல் இருக்கும் அதிகாரிக்கு புகார் அளிப்பதும் வழக்கமான முறைகளில் ஒன்று, ஆனால் அப்படி கொடுக்கப்படும் புகாரை கண்டுகொளளாமல் அலட்சியம் காட்டுவது, ஒரு நடைமுறை சிக்கலாக இருந்துகொண்டு இருக்கிறது. அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது, குறிப்பிட்ட காவல் அதிகாரி மீது வழக்கு தொடரவேண்டும்.
ஆனால், நேரடியாக வழக்கிற்கு சென்றால், நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்காது, அதற்கு காரணம், காவர் துறை ஊழியர்களுக்காகவே ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெயர்தான் PCA Police Complaint Authority. ஒரு காவல் அதிகாரி மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், PCA வுக்குதான் புகார் அளிக்க வேண்டும். முதலில் அவர்கள் விசாரணை தொடங்கும், முடிந்தவரை அங்கேயே நமக்கு தீர்வுகள் கிடைக்கும். அல்லது புகார் அளித்தவருக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது, நீதிமன்ற நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்படும். அந்த அனுமதியோடு நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.

🔊 Listen to this ஒரு காவல் ஊழியர் தவறு செய்தால், அவருடைய மேல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்பது முறை. அதே சமயம், ஒரு காவல் அதிகாரி தவறு செய்யும் பட்சத்தில், அவரைப் பற்றிய புகாரை அவருக்கு மேல் இருக்கும் அதிகாரிக்கு புகார் அளிப்பதும் வழக்கமான முறைகளில் ஒன்று, ஆனால் அப்படி கொடுக்கப்படும் புகாரை கண்டுகொளளாமல் அலட்சியம் காட்டுவது, ஒரு நடைமுறை சிக்கலாக இருந்துகொண்டு…