3. சட்ட அறிவுக்களஞ்சியம்,நீதியைத்தேடி (வாரண்ட் பாலா) 3/32. உங்களாலும் சட்டத்தை உருவாக்கவோ நீக்கவோ முடியும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/32. உங்களாலும் சட்டத்தை உருவாக்கவோ நீக்கவோ முடியும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

சட்ட-அறிவுக்களஞ்சியம்

32. உங்களாலும் சட்டத்தை உருவாக்கவோ நீக்கவோ முடியும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

பொதுவாக, நல்ல விசயத்தை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், அதற்குத் தக்கவாறு, ஏதாவது பதவியில், அல்லது அதிகாரத்தில், இருக்க வேண்டும் எனத்தவறாக நினைக்கிறார்கள். இதற்கு மட்டுமல்ல, எல்லாவற்றிலும் தவறாக நினைப்பதற்கு அடிப்படை காரணமே, சட்ட அறியாமைதான்.

உண்மையில் அதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரிகளும்தான், நாம் ஏன் அதிகாரத்திற்கு வந்தோம்? என்று நினைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் எல்லாம், அவர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஒரு குறிப்பிட்ட அதிகார எல்லைக்குள்தான் நல்லெண்ணத்தோடு செயல்பட முடியும் என்பதில்லை.

என்றாலும் கூட, சட்ட விசயம் தெரியாத காரணத்தால், அதிகாரத்தையே பயன்படுத்த தெரியாதவர்கள், எப்படி மற்றவைகளைத் தெரிந்து செயல்பட முடியும்? அப்படியே செயல்பட நினைத்தாலும், தேவையில்லாது பிரச்சினைகள் எழலாம் என்ற பயத்தில் செயல்படவும் மாட்டார்கள்.

ஆனால், பொது மக்களான உங்களுக்கு அப்படி ஏதும் வரையறை கிடையாது. நீங்கள் நினைக்கும் பல நல்ல காரியங்களைத் தாராளமாகச் செய்யலாம். இது பற்றி “அடிப்படை கடமைகள்” என்ற  பகுதியில் விரிவாக சொல்கிறேன்.

அதேபோல, அதிகாரத்தில் இருந்து கொண்டுதான் அல்லது ஆட்சியில் இருந்து கொண்டுதான் ஒரு சட்டத்தை உருவாக்க முடியும், அல்லது நீக்க முடியும் என்பதல்ல. உச்சநீதிமன்கறத்தின் துணைக்கொண்டு, “யார் வேண்டுமானாலும் ஒரு வழக்கைத் தொடுத்து தேவையான ஒரு சட்டத்தை கொண்டு வரவோ, அல்லது தேவையில்லாத ஒரு சட்டத்தை நீக்கவோ முடியும்”. இது குறித்தும் பின்னர் தக்க சமயத்தில் விரிவாக பார்ப்போம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

1 thought on “3/32. உங்களாலும் சட்டத்தை உருவாக்கவோ நீக்கவோ முடியும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.”

  1. அருமை. சட்டம் இயற்றுவது பற்றி தகவல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?

🔊 Listen to this Views: 3 13.நாமெல்லாம் நிரபராதிகளே? ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  நீங்க சட்டப்படி வாழ்கிறதாலதான் வெளியில இருக்கிங்க அப்படீன்னு நான் சொல்றத ஆராய்ச்சி செய்தால்

குற்ற விசாரணைகள்

1/25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.1/25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.

🔊 Listen to this Views: 5 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 25. நீதிமன்றங்கள் இரண்டு வகை. பொதுவாக நீதிமன்றங்கள் இரண்டு வகைதான். இதனை அடிப்படையாக கொண்டு பல

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/24. சுதந்திர உரிமைகள்.  சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/24. சுதந்திர உரிமைகள்.  சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

🔊 Listen to this Views: 22 24. சுதந்திர உரிமைகள்.  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற மூலாதாரத்தின் கீழ், நமக்கு உள்ள மற்ற சுதந்திர உரிமைகள் குறித்துப் பார்ப்போம். இந்தியாவில் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அதிர்ஷ்ட சாலிகள். ஏனெனில்,

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.
Enable Notifications OK No thanks